தருமபுரி, மார்ச் 8- போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங் கத்தின் சார்பில் வாகன பிரச்சாரம் நடை பெற்றது. அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித் தியாச தொகையை சரிசெய்ய அரசே பட் ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும்.ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு பலன்களை வழங்க வேண்டும். அரசு பேருந்துகளுக்கு தேவை யான உதிரிபாகங்களை வழங்கி பரா மரிப்பை மேம்படுத்தவேண்டும்.போக்கு வரத்து கழகங்களில் தனியார் ஒப்பந்த முறையை புகுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத் தின் சார்பில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. தருமபுரி பணிமனை முன்பு நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மத்திய சங்க நிர்வாகி சேகர் தலைமை வகித்தார். மண்டல தலைவர் எஸ்.சண்முகம், மண்டல செயலாளர் சி. முரளி, மத்திய சங்க நிர்வாகிகள் மனோன் மணி,பஸ்வராஜ், வெங்கடாஜலபதி உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றி னர். இந்த பிரச்சார இயக்கம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. ஈரோடு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினரின் இருசக்கர வாகன பிரச்சாரம் புதனன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் வழியாக இப்பிரச்சாரம் புதனன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச் சாரம் மேற்கொண்டனர். முன்னதாக இந்த பிரச்சார பயணக்குழு வில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பன்முகக்குழு உறுப்பினர் என். முருகையா, மாநில துணை பொது செய லாளர்கள் எம்.கனகராஜ், டி.ஜான்சன் கென் னடி, மாநில நிர்வாகிகள் கே.வேளாங்கன்னி ராஜ், பி.செல்லதுரை, ஈரோடு மண்டல தலை வர் கே.மாரப்பன், திருப்பூர் மண்டல தலைவர் கே.கந்தசாமி, கோவை மண்டல பொது செய லாளர் எம்.பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகி கள் இடம் பெற்றனர்.