உதகை, செப்.26- மதுபான பெட்டிகளுக்கான இறக் குக்கூலி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மதுபான உற்பத்தி ஆலை நிர்வா கமே இறக்கு கூலி உயர்வை வழங்க வேண்டும். டாஸ்மாக் கிடங்கு சுமைப் பணி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஏற்றுக் கூலி, இறக்குக்கூலியை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரி நிர்ணயம் செய்ய வேண்டும். டாஸ்மாக் தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், குன் னூர், வண்டிச்சோலை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ் மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் ரங்கசாமி தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்டத் தலை வர் எல்.சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன், விஜய குமார், ஆட்டோ சங்கச் செயலாளர் யோகேஷ், சாலையோர வியாபாரி கள் சங்கச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், லட்சுமணன் நன்றி கூறினார்.
கோவை இதேபோன்று கோவை மாவட் டம், பீளமேடு பகுதியிலுள்ள டாஸ் டாக் குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட் டப் பொருளாளர் எம்.எச்.ஜஹாங்கீர் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பீர்முகமது, மாவட்ட நிர்வாகி ஏ.அபு தாஹிர், சிஐடியு கோவைமாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.