உதகை, அக். 25- தமிழக அரசு பிறப்பித்த ஆலை மூடல் மறுப்பாணை மற்றும் தொழி லாளர் உதவி ஆணையர் பிறப்பித்த முழு சம்பள உத்தரவு இவற்றின் அடிப்படையில் தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை நிறைவேற் றக்கோரி, வெள்ளியன்று உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐ டியு ஸ்டெர்லிங் தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள சாண்டிநல்லா பகுதி யில் ஸ்டெர்லிங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவ னத்தை தற்போது அமெரிக்க நிறு வனம் நடத்தி வரும் நிலையில், கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங் கப்படாமல் ஆலையை மூடும் நட வடிக்கையில் தொழிற்சாலை நிர் வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நி லையில், தமிழக அரசு ஆலையை மூடக்கூடாது என உத்தரவு பிறப் பித்துள்ள நிலையில் தொழிலாளர் உதவி ஆணையரும் தொழிலாளர் களுக்கு முழு சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், உதகையில் இயங்கி வரும் தொழிற்சாலையை குஜராத் தில் உள்ள காரகடி என்ற இடத்திற்கு 101 தொழிலாளர்களோடு தொழிற் சாலையை மாற்ற முடிவு செய்யப் பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித் துள்ளது. இதனை கண்டித்தும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வா கம் தலையிட வேண்டும். தமிழக அரசு மற்றும் தொழிலாளர் ஆணை யர் விதித்த உத்தரவுகளை பர்ஃ பெக்ட்டே நிர்வாகம், நடைமுறைப் படுத்த வேண்டும். ஒன்பது மாத ஊதியத்தை தொழிற்சாலை நிர்வாகம் வழங்க வலியுறுத்த வேண் டும் எனக்கூறி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து சிஐடியு ஸ்டெர் லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆப்பிரகாம், பொதுச்செய லாளர் யு.மூர்த்தி, சிஐடியு மாவட் டச் செயலாளர் வினோத், பொரு ளாளர் நவீன்சந்திரன் ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந் தித்து கோரிக்கைகள் குறித்து பேசி னர். இதில், ஊதிய நிலுவை குறித்து உடனடியாக தலையிட்டு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும், மீண்டும் நவம்பர் 5 ஆம்தேதி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டுவதாக ஆட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று அனைவ ரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து சிஐடியு தலைவர் கள் கூறுகையில், தொழிலாளர்க ளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு உத்தரவை நடைமுறைப் படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென் றால் தீவிர போராட்டத்தை முன் னெடுப்போம், என்றனர்.