districts

img

உள்ளாட்சி தூய்மை பணியில் தனியார்மயத்தை எதிர்த்து திருப்பூர், பூண்டியில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.7- திருப்பூர் மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் தூய் மைப் பணியை தனியார்மயப்படுத் தும் முடிவை கைவிட வலியுறுத்தி யும், ஒப்பந்த, தினக்கூலி ஊழியர் களின் கோரிக்கைகளை முன்வைத் தும் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர் (சிஐடியு) சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உள் ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர், ஓட்டுநர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். கொரோனா கால ஊக்கத்  தொகை வழங்க வேண்டும். கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுகாதார பரப்புரையாளர்களை நிரந் தரம் செய்ய வேண்டும். தூய்மைப்  பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட் டுநர், கொசுப்புழு ஒழிப்பு பணியா ளர், சுகாதாரப் பரப்புரையாளர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் இபிஎப் பிடித்தம் செய்வதை முறைப்படுத்தி கண்காணித்திட வேண்டும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடி நீர், தூய்மை பணியாளர்களை பணி  பாரபட்சம் இல்லாமல் காலமுறை ஊழியராக மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் பி.பழ னிசாமி, மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சம்பத், ஒய்.அன்பு, பனியன் சங்கப் பொருளாளர் அ. ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க நிர் வாகி எஸ்.வெங்கடாசலம், சிஐடியு நிர்வாகிகள் ஒய்.அன்பு, பி.பாலன், சிவராமன், நடராஜ், பாலசுப்பிரம ணியன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இரு இடங்களிலும் உள்ளாட்சி பணி யாளர்கள் உட்பட பெருந்திரளா னோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.