நாமக்கல், அக்.29- முறைசாரா தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி, சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான மற்றும் முறைசாரா நலவா ரிய தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். விசைத்தறி, லாரி, கடை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு மாதம் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐடியு) திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி பேசி னார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர் வாகி ராமசாமி வாழ்த்திப் பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.