districts

img

கட்டுமானத் தொழிலாளர்களின் தரவுகளை மீட்டெடுக்க வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.29- கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் ஆன்லைன் தரவுகளை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆன்லைன் செயலியில் சேமிக்கப்பட்ட, அரசுத்துறை ஆவணங்கள் அழியவில்லை. கட்டுமானம் முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய தரவுகளும், ஆவணங்களும் அழிந் தது எப்படி? 70 லட்சம் அமைப்புசாரா கட்டு மானத் தொழிலாளர்களின், ஆன்லைன் தரவு களை மீட்டெடுக்க வேண்டும் என வலியு றுத்தி நாமக்கல் மாவட்ட நலவாரிய அலுவல கம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ந.வேலு சாமி, உதவிச்செயலாளர் சு.சுரேஷ், தையல்  சங்க மாவட்டச் செயலாளர் ஐ.ராயப்பன், ரயில்வே கூட்ஸ் சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர் சரவணன். உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.