திருப்பூர், அக். 22 – திருப்பூரில் வேலை செய்யும் அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்கக் கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன் பாக செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு சிஐடியு பனியன் சங்கப் பொரு ளாளர் கே.நாகராஜ் தலைமை வகித்தார். இதில் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு பனி யன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு மோட் டார் தொழிலாளர் சங்கச் செயலாளர் ஒய். அன்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். அதேபோல் அனுப்பர்பாளையம் ஆத் துப்பாளையம் சாலையில் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐ டியு அனுப்பர்பாளையம் பனியன் ஏரியா துணைத் தலைவர் எம்.பாண்டியராஜன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட் டத் தலைவர் சி.மூர்த்தி, பாத்திரத் தொழிலா ளர் சங்கச் செயலாளர் கே.குப்புசாமி ஆகி யோர் உரையாற்றினர். தையல் கலைஞர்கள் சங்க செயலாளர் வேல்முருகன் உள்பட பல் வேறு பிரிவு தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொணடனர்.