திருப்பூர், ஜன. 29– திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்த தொழிலாளிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தர மறுக்கும் கம்பெனி நிர்வாகத்தைக் கண்டித்து பனியன் கம்பெனி முன்பாக சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மங்கலம் சாலை எஸ்ஆர் நகர் பகுதியில் மகம் நிட்பேஷன் என்ற பனியன் கம்பெனி செயல்பட்டு வருகி றது. இங்கு ரமேஷ் என்ற தொழிலாளி மூன்று மாதங்கள் வேலை பார்த்தார். திடீரென வேலையை விட்டு நிறுத்தப் பட்ட தொழிலாளிக்கு இரண்டு மாத சம்ப ளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு மாத சம்பளம் பாக்கி இருந்தது. இந்த சம்பள பாக்கியை ரமேஷ் அந்த கம்பெனி நிர்வாகத்திடம் கேட்டபோது தர மறுத்துள்ளனர். இதையடுத்து ரமேஷ், சிஐடியு பனி யன் பொதுத் தொழிலாளர் சங்கத்தில் புகார் செய்தார். சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் அந்த கம் பெனி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தொழிலாளிக்குத் தர வேண்டிய சம்பள பாக்கி பற்றி கேட்டபோது தர முடியாது என்று இறுமாப்புடன் பதிலளித்துள் ளனர். எனவே தொழிலாளர் துறை உதவி ஆணையரிடம் சங்கத்தின் சார் பில் புகார் செய்தனர். அவர்கள் இப்பி ரச்சனையில் தலையிட்டுப் பேச வில்லை. எனவே திருப்பூர் கேவிஆர் நக ரில் உள்ள மத்திய காவல் நிலைய ஆய் வாளரிடம் புகார் கூறியுள்ளனர். அவர் கள் தலையிட்டும் பிரச்சனை தீர வில்லை. இதையடுத்து திங்களன்று மகம் நிட் பேஷன் நிறுவனத்திற்கு முன்பாக சிஐ டியு பனியன் பொதுத் தொழிலாளர் சங் கத்தினர் பனியன் தொழிலாளிக்கு சட் டப்படி வழங்க வேண்டிய நிலுவை ஊதி யத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கருவம் பாளையம் ஏரியா செயலாளர் சக்தி வேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் கே.நாகராஜ், சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் பி.பாலன், நிர்வாகி கள் பாண்டியராஜன், ஏ.கே.ஜி.நகர் மாணிக்கம், மற்றும் துரைமுருகன் உள் ளிட்டோர் கோரிக்கையை வலியு றுத்திப் பேசினர். இதில் திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். மகம் நிட்பேஷன் நிர்வாகம் தொழி லாளி ரமேஷுக்கு தர வேண்டிய சட்டப் படி நியாயமான ஊதியத்தைத் தரா விட்டால் அடுத்தக்கட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு சங்கத்தி னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.