districts

img

மோட்டார் வாகன சட்டத்திற்கு சிஐடியு எதிர்ப்பு

நாமக்கல், நவ.2- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள  மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத் தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என தெரிவித்து நாமக்கல் மாவட்ட மோட் டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தின் (சிஐடியு) சார்பில்  குமராபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் ஜி.செந்தில் தலைமை வகித் தார். சங்க மாவட்ட செயலாளர் சு. சுரேஷ், மாவட்ட பொருளாளர்  ஆர். காளியப்பன். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில், சிஐ டியு மாவட்ட தலைவர் எம். அசோ கன் உள்ளிட்டோர் வாழ்த்தி உரை யாற்றினர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், ஒன் றிய அரசு கொண்டு வந்துள்ள மோட் டார் தொழிலை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தியதை வாபஸ் பெற வேண்டும். இன்சூரன்ஸ், எப்சி உள் ளிட்ட கட்டணங்கள் விலை உயர்வினை வாபஸ் பெற வேண்டும். அபராதம் என்ற  பெயரில் சாலையில் வாகன ஓட்டுநர் களை அவமானப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட உதவி  செயலாளர் நவாப்ஜான் நன்றி கூறி னார்.  முடிவில், குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பூங்குழலி யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.