திருப்பூர், டிச.26- பெருமாநல்லூரில் வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா மற்றும் சிஐடியு மோட் டார் சங்க பெயர்ப்பலகை திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பெரு மாநல்லூரில் சிஐடியு மோட் டார் சங்க புதிய கிளை பெயர்ப்பலகை திறப்பு விழா மற்றும் வெண் மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா நிகழ்ச்சி கிளைத் தலைவர் எம்.கந்த சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், சங்க பெயர் பலகையை மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் திறந்து வைத்தார். மாவட் டச் செயலாளர் ஒய்.அன்பு சிறப்புரையாற் றினார். இந்நிகழ்ச்சியில், வி.தொ.ச வடக்கு ஒன் றியச் செயலாளர் கே.சுப்பிரமணியம், விச வடக்கு ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி, பனி யன் சங்க பகுதிக்குழு செயலாளர் பி.கே. கருப்புசாமி, கைத்தறி சங்க நிர்வாகி எம். வெள்ளிங்கிரி உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெருமாநல்லூர் சிஐடியு மோட்டார் சங்க கிளைத் தலைவராக எம்.கந்தசாமி, செயலாளராக எம்.ஆர்.பழ னிச்சாமி, பொருளாளராக சிவராஜ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.