ஈரோடு, ஜூன் 28- சில்லரை மது விற்பனை கடை களுக்கான வாடகை மற்றும் மின் கட்டணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் சார்பில் மாவட்ட மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, மாவட்டத்தில் 24 கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை வரவேற் கிறோம். விருப்பு, வெறுப்பு அடிப்படை யில் நிர்வாகம் நடைபெறுவதால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும், கடை பணிக்கு வராத மேற் பார்வையாளர்கள் மீது நடவடிக்கை யும் எடுப்பதில்லை. மின் கட்டணத் திற்கும், கடை வாடகைக்கும், சரக்கு களை இறக்குவதற்கான கூலி உள் ளிட்டவற்றை வழங்குவதில்லை. விற்பனை தொகையிலிருந்து செலுத்த வேண்டியுள்ளது. இதற் காக கூடுதல் விலைக்கு விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இல்லாவிட்டால் குற்றம் சுமத்தி கடை யிலிருந்து வெளியேற்றப்படு கின்றனர். கடை விற்பனையில் நடக்கும் தவறுகளுக்கு மேற்பார்வை யாளர்களை உட்படுத்துவதில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விற்பனையாளர்களை பழிவாங்குவது உள்ளிட்ட புகார் களை மாவட்ட தலைவர் என். முருகையா, பொன்.பாரதி, ரவிச் சந்திரன் மற்றும் ராஜேந்திரன் உள் ளிட்டோர் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.