உடுமலை, பிப்.22- போக்குவரத்து துறைக்கு தேவை யான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய வலியுறுத்தி சிஐடியு போக்குவ ரத்து சங்கத்தின் சார்பில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு செவ் வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுப்போக்குவரத்து துறை யில் தேவையான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். மேலும் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத் துநர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களைத் தனியார் காண்ராக்ட் மூலமாக பணி நியமனம் செய்ய ஏதுவாக அர சாணை வெளியிட்டதை ரத்து செய்ய வேண்டும். புதிதாக வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூ தியம் திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் உடுமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் உடுமலை துணைத் தலைவர் செவந்தி சீனிவாசன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை விளக்கி மண்டல துணை பொதுச்செயலாளர் விஸ்வ நாதன் பேசினார். இதில், சங்கத்தின் தலைவர் பாபு, செயலாளர் கார்த்திகே யன், பொருளாளர் பெரிய மயில்சாமி, துணைச் செயலாளர் ஜோதி கண்ணன், செந்தில், சிவகுமார் உள்ளிட்ட திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.