திருப்பூர், ஜூன் 13- திருப்பூர் கலைஞர் பேருந்து நிலை யதிற்குள் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியு றுத்தி சிஐடியு சாலையோர வியாபாரி கள் செவ்வாயன்று மாநகராட்சி அலு வலகத்தில் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கலைஞர் பேருந்து நிலையம் உள்ளே போக்குவரத் திற்கும், பொது மக்களுக்கும் இடை யூறு இல்லாமல் தள்ளு வண்டியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை வியா பாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை விண்ணப் பித்துள்ள அனைவருக்கும் ஆய்வு செய்து அட்டை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ள பெண் சாலையோர வியாபாரிகளுக்கான மாதாந்திர உதவி தொகை ரூ.6 ஆயி ரம் கிடைத்திட வழிவகை செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது. இதில், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் டி.முருகேஷ், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவராமன், கருவம்பாளை யம் கோபால் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர செய லாளர் டி.ஜெயபால் உட்பட சாலை யோர வியாபாரிகள் பங்கேற்றனர். காத்திருப்புப் போராட்டம் நடத்திய நிலையில் மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் தொலைபேசியில் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலனிடம் பேசினார். தற்போது நான்காவது குடி நீர் திட்டம் தொடர்பான பணிக்காக மேட்டுப்பாளையம் சென்றிருப்பதால், புதன்கிழமை நேரில் வந்து பேசித் தீர்வு காண்பதாக தெரிவித்தார். மேயர் பதிலைத் தொடர்ந்து புதனன்று நிர்வாகி கள் நேரில் சந்தித்து பேசி இப்பிரச்ச னைக்கு உரிய தீர்வு காண்பது என்ற அடிப்படையில் காத்திருப்புப் போராட் டம் முடித்துக் கொள்ளப்பட்டது.