சேலம், நவ.16- பிஎப், இஎஸ்ஐ போன்ற சட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் புதனன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமைப்பணி தொழிலாளர் களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பணி செய்யும் இடங் களில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகை களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலம் ஜில்லா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், ரயில்வே ஏற்று மதி, இறக்குமதி தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செய லாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி, சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், கூட்செட் பொருளாளர் பி.சக்திவேல் ஆகி யோர் உரையாற்றினர். இதில், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. ஆறுமுகம், எஸ்.பிரபு, மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராள மானோர் பங்கேற்றனர்.