கோவை, ஜூன் 17– தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 ஆவது மாநில மாநாடு நாளை (ஜூன் 19) ஞாயிற்றுக்கிழமை கோவையில் துவங்க உள்ளது. இதனையொட்டி வாகன பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் 15 ஆவது மாநில மாநாடு ஜூன் 19 ஆம் தேதி துவங்கி 21வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெறு கிறது. இம்மாநாட்டில் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகின்றனர். முன்னதாக மாநாட்டு செய்தி களை கொண்டு செல்லும் வகையில் வாகன பிரச்சார இயக்கம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிற வாகன பிரச்சார மும், கடந்த காலத்தில் அரசு போக்கு வரத்து ஊழியர் நலனுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை களுக்காகவும் சிஐடியு முன்னெ டுத்த இயக்கங்கள், பொது போக்கு வரத்தை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்த டிஜிட் டல் பிரச்சார வாகனம் என இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகி றது. இது கோவை, திருப்பூர், நீல கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பிரச்சாரங்கள் நடைபெற்று வரு கிறது. சிஐடியு சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடை பெற்று வரும் இப்பிரச்சார இயக் கத்தில் மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் பலர் பங் கேற்றனர். குறிப்பாக அரசு போக்கு வரத்து பணிமனை, பேருந்து நிலை யங்களில் இந்த பிரச்சார இயக்கத் திற்கு போக்குவரத்து தொழிலாளி ளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.