districts

img

கேங்மேன் பயிற்சி காலத்தை குறைத்திடுக

கோவை, டிச.28- கேங்மேன் பயிற்சி காலத்தை 3 மாதங்களாக குறைக்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பினர் செவ்வா யன்று கோவையில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பல நூறு கிலோ மீட்டர் தூரம்  கடந்து குடும்பத்தை விட்டு பணியாற் றும் தொழிலாளர்களுக்கு சொந்த மாவட் டங்களில் பணியாற்றும் வாய்ப்பை  உருவாக்க வேண்டும். கல்வி தகுதி யின் அடிப்படையில் உள்முக தேர்த லில் வாய்ப்பளிக்க வேண்டும். தேர் வான 4  ஆயிரம் நபர்களுக்கு பணி நிய மன உத்தரவுகளை வழங்க வேண்டும். கேங்மேன் பயிற்சி காலத்தை 3 மாதங் களாக குறைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாயன்று கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை டாடாபாத் மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.காளிமுத்து தலைமை வகித்தார். ஏ.சாதிக் பாட்சா வரவேற்புரையாற்றினார். இதில், மின்  ஊழியர் மத்திய அமைப்பு மாநில  துணைத்தலைவர் டி.கோபாலகிருஷ் ணன், மண்டல செயலாளர் வி.மதுசூத னன், வடக்கு செயலாளர் எம்.மணி கண்டன், தெற்கு செயலாளர் ரத்தின குமார், மாநகர செயலாளர் டி.மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.