districts

img

ஊழல் முறைகேட்டை தடுக்காமல் ஊழியர்களின் ஊதியத்தை வெட்டுவதா?

கோவை, ஏப்.27– ஊழல் முறைகேடுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சரிசெய்ய, ஒப்பந்த ஊழி யர்களின் ஊதியத்தை வெட்டும் அநீதியான உத்தரவை திரும்பபெறக்கோரி கோவை யில் புதனன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வரிய தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நிர்வாகச் சீர்கேட்டின் விளைவாக குடிநீர் வடிகால் வாரியம் நிதி நெருக்கடியில்  சிக்கித் தவிக்கிறது. இதனை சரிசெய்ய ஒப் பந்த ஊழியர்களின் ஊதியத்தை வெட்டி குறைக்கிற நடவடிக்கையில் வாரிய நிர்வா கம் ஈடுபட்டுள்ளது.  குடிநீர் உற்பத்தி செலவு கூடியுள்ளதை ஈடுகட்ட தமிழக அரசிடமி ருந்து மானியம் பெறாமலும், உள்ளாட்சி அமைப்புகள் வாரியத்திற்கு தர வேண்டிய ரூ.800 கோடி குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்காமலும்,

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை சரிபாதியாக வெட்டுகிற அநீ தியான உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர் களை நியமனம் செய்ததாகக்கூறி முறை கேடாக பில்போட்டு மாதந்தோறும் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு வரு கிறது. இதேபோன்று போலியான பெயரில் இஎஸ்ஐ, இபிஎப் கட்டியதாக ஒப்பந்ததாரர் களும், அதிகாரிகளும் இணைந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.  தேவைக்கேற்ப ஊழியர்கள் நியமிக்காத தால், குடிநீர் திட்டங்கள் முறையான பரா மரிப்பின்றி பழுதுகள் உள்ளிட்ட தேவை யற்ற செலவுகள் மூலம் வாரியப்பணம்  வீணாகி வருகிறது. அதிகாரிகள் மட்டும்  சீரான பதவி உயர்வு, 6 மாதத்திற்கு ஒரு முறை பஞ்சப்படி உயர்வு வருடாந்திர ஊதிய உயர்வு, உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் தவறாமல் பெற்றுவரும் போது, நிதி நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஊழலால் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடு மையான நிதி நெருக்கடிக்கு ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம்தான் என முன்மொ ழிந்து ஊதியத்தை வெட்டுகிற நடவடிக் கையை கண்டித்து புதனன்று தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரிய தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாரதிபார்க் சாலை குடிநீர் வடி கால் வாரிய தலைமை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் துணை தலைவர் எம்.சசி குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய சம்மேளன தலைவர் பாலகுமார், மாவட்ட தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் சரவணன்,  உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர் கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.