districts

img

ஆயுட்கால வரி விதிப்பை ரத்து செய்ய சிஐடியு கோரிக்கை

திருப்பூர், நவ. 24 –  மோட்டார் வாகனங்களுக்கு ஆயுட் கால வரி விதிப்பு செய்திருப்பதை ரத்து  செய்யுமாறு திருப்பூர் மாவட்ட மோட் டார் ஆட்டோ மொபைல் லேபர் யூனி யன் (சிஐடியு) கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட மோட்டார் சிஐடியு  சங்கத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் அருண் ஆகியோர் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: கடந்த நவம்பர் 7ஆம் தேதி தமிழ் நாடு அரசு வெளியிட்ட அரசாணைப்படி  மோட்டார் வாகனங்களுக்கு ஆயுட் கால வரி விதிப்பு தற்போது வேகமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தவணை முறையில் இந்த வரியை செலுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலாக்கப்படுகிறது. தொழில் நிலைமை மிகவும் நலிவ டைந்துள்ள நிலையில் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எப்.சி.  கட்டணம், ஆர்டிஓ அலுவலகப் பணிக ளுக்கான கட்டணங்கள், மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரிமீயம் கடுமை யான உயர்வு ஆகிய காரணங்களால் வாடகை வாகன ஓட்டுநர்கள், சிறு உரி மையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள் ளாகி தொழிலே நடத்த இயலாத சூழ லில் உள்ளனர். இந்நிலையில் வாகனங் களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு கடு மையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடி யதாக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர்  மாநகரம், அவிநாசி, திருமுருகன் பூண்டி, உடுமலை, பல்லடம், தாராபுரம்,  குன்னத்தூர், பொங்கலூர், காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் சுற்றுலா வாடகை வாகனங்கள் இயக் குவது சிறுதொழிலாக நடந்து வருகி றது. அனைத்து வாகன உரிமையாளர் கள், ஓட்டுநர்கள் தற்போது அநியாய  ஆன்லைன் அபராதம், ஆப் நிறுவனங்க ளின் கொள்ளை, சுங்கக் கட்டணம், அக் ரிகேட்டர் விதிகள் போன்றவற்றால் பொருளாதாரரீதியாக பாதிப்புக்கு உள் ளாகி வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழக அரசின்  ஆயுட்கால வரி விதிப்பு சரியானதல்ல.  எனவே மோட்டார் தொழிலையும்,  இதை நம்பியுள்ள தொழிலாளர்களை யும் மேலும் பாதிக்கக்கூடிய இந்த புதிய  வரி விதிப்பை உடனடியாகக் கைவிட வேண்டும். பழைய முறையையே பின் பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்து ஆவன செய்யுமாறு மோட்டார் சங்கத் தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.