கோவை, டிச.22- சிஐடியு கட்டிடம் மற் றும் கல்லுடைக்கும் தொழி லாளர் சங்கத்தின் சூலூர் தாலுகா மாநாடு நடைபெற் றது. மாநாட்டில், புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட் டனர். கோவை மாவட்டம், சிஐ டியு கட்டுமான சங்கத்தின் சூலூர் தாலுகா நான்கா வது மாநாடு, சூலூர் எஸ்.ஆர்எஸ் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. சங்க கொடியை கே.பூபதி ஏற் றினார். சூலூர் பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப்பினர் என்.வேலுசாமி வரவேற்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் கே.மனோகரன், துணைச் செய லாளர் எம்.வேல்முருகன், சிபிஎம் சூலூர் தாலுகாச் செயலாளர் எ.சந்திரன், டாஸ்மாக் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.தங்க ராஜ், விசைத்தறி சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜோதிபாசு, சுமைப்பணி சங்க மாவட்டத் துணைத் தலைவர் சி.சுப்பிரம ணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக சூலூர் தாலுகா தலைவ ராக கே.பூபதி, செயலாளராக கே.சீனிவா சன், பொருளாளராக எம்.முத்துச்சாமி உள் ளிட்டோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். இதில் ஏராளமான கட்டிட தொழி லாளர்கள் பங்கேற்றனர்.