districts

img

கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க சிஐடியு மாநாடு வலியுறுத்தல்

திருப்பூர், செப். 30 – கட்டுமானத் தொழில் நலிவுக்குக்  காரணமாக இருக்கும் அபரிமிதமான  ஜிஎஸ்டி வரியை குறைத்து கட்டுமா னத் தொழிலைப் பாதுகாக்க வேண் டும் என்று திருப்பூர் மாவட்ட கட்டிட  கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு சிடபிள்யூஎப்ஐ) மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் திங்களன்று திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சங்க 15ஆவது மாநாடு மாவட் டத் தலைவர் எம்.கணேசன் தலைமை யில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர்  சி.மூர்த்தி தொடக்கி வைத்துப் பேசி னார். சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் டி.குமார் அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் அ. ராஜன் வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். இதன் மீது விவாதம் நடைபெற் றது. பின்னர் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கட்டுமானத் தொழில் நலிவைச் சந்திப்பதற்கு கார ணமான ஜிஎஸ்டி வரி உயர்வை  குறைக்க வேண்டும், கட்டுமானத்  தொழிலாளர் நலவாரிய குளறுபடி களைக் களைய வேண்டும். கட்டு மானப் பொருட்கள் விலை உயர் வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு  வயதை 55 ஆக நிர்ணயித்து ஓய்வூதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் சங்கத்தின் திருப் பூர் மாவட்டத் தலைவராக எம்.கணே சன், பொதுச் செயலாளராக டி.கு மார், பொருளாளராக ரமேஷ் ஆகி யோரும், 15 பேர் நிர்வாகக்குழு உறுப் பினர்களாகவும் தேர்வு செய்யப்பட் டனர். இவர்கள் உட்பட மொத்தம் 40  பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து வைத்து சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் பேசினார். இம்மாநாட்டில் பெண்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டப் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.