தருமபுரி, அக்.16- மூன்று மாதங்களாக தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்காமல், இழுத்தடிக்கும் தனியார் கார் மென்ட்ஸ் நிறுவனத்தின் போக்கிற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்து, உட னடியாக ஊதியம் வழங்கிட ஆட்சி யர் தலையிட வேண்டும் என சிஐ டியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிஐடியு தருமபுரி மாவட்ட கார்மென்ட்ஸ் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் கி.சாந்தியிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, நல்லம் பள்ளியை அடுத்துள்ள பாளையம் புதூர் கூட்ரோடு அருகே தனியா ருக்கு சொந்தமான ஜெயம் கார் மெண்ட்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப் பட்டது. இந்நிறுவனத்தில், நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு பகுதிகளிள் இருந்து வந்து சேர்ந்த னர். இவர்களுக்கு, ரூ.9,500 முதல் ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் கொடுப் பதாக கார்மெண்ட்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்திருந்தது. இந்நிலை யில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் அனைவரும் பணியில் சேர்ந்து வேலை செய்துள்ளனர். வேலைக்கு சேர்ந்த மாதம் முதல் கொண்டு 3 மாதங்கள் கடந்த பின்பும் கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலி ருந்து சம்பளம் எதுவும் வழங்கப்பட வில்லை. இதனால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து, நிர்வாகத்தில் கேட்ட பொழுது அடுத்த மாதம் தருகி றோம் என்கிற உறுதியை அளித்து விட்டு திடீரென நிறுவனத்தை மூடி யுள்ளனர். மேலும், அந்நிறுவனத்தின் மேலாளர் சிவா என்பவர் பெண் தொழி லாளர்களிடம் ஆபாசமாக பேசுவ தும், செல்பேசியில் தொந்தரவு செய் வதாகவும் தொழிலாளர்கள் தெரி வித்தனர். இந்நிலையில், நூற்றுக் கும் மேற்பட்ட பெண்களுக்கு சுமார் மூன்று மாத சம்பளம்வழங்காமல் கார்மெண்ட்ஸ் நிறுவனம் ஏமாற்றி யதாக, தொப்பூர் காவல் நிலையத் தில் கடந்த மாதம் புகார் அளித்துள் ளனர். அப்பொழுது நிறுவனம் இம் மாதம் 15ஆம் தேதி கட்டாயம் ஊதி யத்தை கொடுத்து விடுவதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 15 ஆம் தேதி கார் மென்ட்ஸ்-க்கு சென்ற போது பூட் டியே இருந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களுக்கான ஊதியம் உட னடியாக வழங்கப்பட வேண்டும். மேலும், பெண்களை ஆபாசமாக பேசிவரும் அந்நிறுவன மேலாளர் சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், தருமபுரி மாவட் டத்தில் சிறிதும், பெரிதுமாக சுமார் 50க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை கள் தயார் செய்திடும் ஆலைகள் செயல்படுவதாக அறிகிறோம். இதில் பெரும்பாலும் பெண் தொழி லாளர்களே உற்பத்தியில் ஈடுபடுகின் றனர்
. மாவட்டத்தில் நிலவிடும் தொழில் வறட்சியை பயன்படுத்திக் கொண்டு பெரும்பாலான நிறுவ னங்கள் தொழிலாளர்களுக்கு சட்டப் படியாக வழங்க வேண்டிய எந்த சலுகையும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் உழைப்பு சுரண்ட லில் ஈடுபடும் இந்நிறுவனங்கள், ஒருகுறிப்பிட்ட காலத்தில் பெருந் தொகையினை லாபமாக ஈட்டிக் கொண்டு எவ்வித முன்னறிவிப்பு மின்றி ஆலைகளை மூடுவதும், தொழிற்சாலைகளின் பெயர். இடத் தினை வேறுபகுதிக்கு மாற்றி தொழி லாளர்களை ஏமாற்றி வருவது வாடிக் கையாக உள்ளது. உதாரணமாக பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கடத்தூர் போசிநாயக் கனஅள்ளி பகுதியில் சுமார் 500 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்த போரன் அப்பேரல்ஸ் நிறுவ னம் அரசின் எவ்வித உத்தரவுகளை யும் மதிக்காமல் ஆலையை நவம் பர் 2017 முதல் சட்ட விரோத கத வடைப்பு செய்து தொழிலாளர் களை வஞ்சித்து வருகிறது. இது போன்ற நிறுவனங்களால் ஏராள மான தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டு தொழிற்சங்கங்களை நாடு கின்றனர். ஆகவே, இப்பிரச்சனை களை முடிவுக்கு கொண்டுவர மேற் கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஆட்சியரிடம் இந்த மனுவினை அளிக்கையில், சிஐடியு தருமபுரி மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் நாகராசன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சண்முகம், கார் மென்ட்ஸ் சங்க மாவட்ட செயலாளர் சி.அங்கம்மாள், நிர்வாகி பி.ஆறு முகம் ஆகியோர் பங்கேற்றனர்.