கோவை, ஜன.28– குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற் றும் ஊழியர்களின் ஊதியத்தை முறை கேடாக அதிகாரிகள் திருடுவதாகவும், இது சம்பந்தமாக ஆட்சியர் தலையிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பிரான் சிஸ் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதா வது, தமிழகம் முழுவதும் உள்ள மக்க ளுக்கு 525-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத் திற்கும் சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிறப்பான முறையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வரு கிறது. இதில் கோவை மாவட்டத்தில் 12 கூட்டு குடிநீர் திட்டங்களில் 225க்கும் மேற் பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்க ளுக்கு 12 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயி லாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள கடந்த பத் தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப் படையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். '
வ்வாறு பணி யமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் இபிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சமூக பாதுகாப்புகள் வழங்கப்படுவ தில்லை. மேலும், இதில் ஏராளமான முறை கேடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்து வரு கிறது. ஒப்பந்த புள்ளியில் நிர்வாகமும், ஒப் பந்ததாரரும் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துகளுக்கு விரோதமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணியமர்த்தப் பட்டுள்ளனர். வாரிய தரப்பட்டியலில் செட்டி யூல் ஆப் ரேட்டின் படி ஊதியம் வழங்கப் படுவதில்லை. இதற்கேற்ப தொகையை பிஎப் கணக்கில் செலுத்தப்படுவதில்லை. போனசையும் குறைத்தும், சமச்சீரற்ற முறையிலும் வழங்கப்படுகிறது.
இம்முறைகேடுகளின் விளைவாக கோவையில் மட்டும் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வாரியத்திற்கு இழப்பும், ஊழி யர்களின் பற்றாக்குறையால் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் செலவீனங்க ளும் ஏற்படுகிறது. இதேபோன்று ஊழியர் களின் ஊதியத்தில் மிகப்பெரிய சுரண்ட லும், இபிஎப் செலுத்துவதில் சட்ட மீறல் களும் நிகழ்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வாரிய மேலாண்மை இயக்குனர் வாரிய ஒப்பந் தத்தில் குறிப்பிட்டுள்ள செட்டியூல் ஆப் ரேட்டின்படி சம்பளத்தையும், இஎஸ்ஐ, பிஎப் போன்ற சமூக பாதுகாப்பு நடைமுறை களையும் அமலாக்க உத்தரவிட்டார். இதன்பின்னரும் மாவட்டத்தில் சம்பந் தப்பட்ட கோட்ட அதிகாரிகள், வாரிய இயக் குநர்கள் உத்தரவை அமலாக்காமல் இருந்து வந்தனர். எனவே, மீண்டும் கடந்த நவம்பர் மாதத்தில் மேற்கு மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டோம். அதன் விளைவாக வாரிய இயக்குநர் போட்ட உத்தரவை அம லாக்க வலியுறுத்தி தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்து, அதன் நகலை எங்கள் சங்கத்திற்கு அளித்தார். இதன் பின்னரும் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் தொழி லாளர் துறை மூலமும், மேற்பார்வை பொறி யாளர் முன்னிலையிலும், பலகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றும் தீர்வு ஏற்பட வில்லை. மேற்கூறிய உத்தரவை அமல் படுத்த வேண்டிய கோட்ட அதிகாரிகள் மறுக்கின்றனர்.
இதன் பின்னணியில் ஊதியம், இபிஎப் வகையில் மாதம் 450 பேருக்கு வாரியம் பட்டு வாடா செய்கிறது. ஆனால், பணியிடங் களில் 226 பேர் மட்டுமே உள்ளனர். பணியில் இல்லாதவர்களுக்கு பில் போட கூடாது என்ற ஒப்பந்த சரத்து இருந்தும், வாரிய மேலாண்மை இயக்குனரின் உத்தரவு இருந் தும், பணியில் இல்லாத 224 பேருக்கான ஊதியம் மற்றும் இபிஎப் வகையில் பில் அதிகாரிகளால் போடப்பட்டு சுமார் மாத மொன்றுக்கு 36 லட்ச ரூபாய் வரை முறை கேடு நடக்கிறது. மேலும், பணியில் உள்ள 226 பேருக்கும் வாரிய செட்டியூல் ஆப் ரேட்டின்படி ஊதியம் வழங்காமல் மாத மொன்றுக்கு சுமார் 13 லட்ச ரூபாய் என மொத்தம் மாதமொன்றுக்கு தோராயமாக 50 லட்ச ரூபாயை கோட்ட அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கூட்டு சேர்ந்து முறை கேடு செய்து வருகின்றனர். பணிபுரியும் ஊழியர்களுக்கு முறை யான ஊதியம், இபிஎப், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை ஒப்பந்ததாரர் மறுக்கும் பட் சத்தில் கோட்ட அதிகாரிகள் அத்தொகையை ஊழியர்களுக்கு வழங்கிவிட்டு அதனை ஒப் பந்ததாரரின் பில்லில் கழித்துக் கொள்ள வேண்டும் என்பது வாரிய இயக்குனர் உத்த ரவிலும் அதனையொட்டி பிறப்பிக்கப்பட்ட தலைமை பொறியாளர் உத்தரவிலும் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை அமலாக்க வேண்டிய அதிகாரிகளே ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வரு கின்றனர். எனவே, இதுதொடர்பாக தாங்கள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். மேலும், ஆகஸ்ட் 2021 முதல் ஊழியர்களுக்கு சேரவேண்டிய ஊதியம், இபிஎப் நிலுவைத் தொகையை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.