உடுமலை, ஆக.20- காவல்துறையின் பொய் வழக்கில் இருந்து சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் விடுதலை செய்யப் பட்டார். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலூகா, எலையமுத்தூர் பகுதியல் ஜெயின் இரிகே சன் என்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இந் திய தொழிற்சங்க மையத்தில் (சிஐடியு) சேர்ந்தனர். ஜெயின் இரிகேசன் நிறுவனத் தின் முன்பு, போக்குவரத்து மற்றும் மக்க ளுக்கு இடையூறு இல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதியன்று சிஐடியு கொடிக்கம்பம் அமைக்கபட்டு கொடி யேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப் போது, அமராவதி காவல்துறையினர், பொது இடத்தில் சட்டவிரோதமாக கொடிக்கம்பம் வைக்கபட்டு உள்ளதென்று நிறுவனத்திற்கு ஆதரவாக உடுமலை சிஐடியு பொதுத்தொழி லாளர் சங்கத்தின் செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளருமான ஜெகதீ சன் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக உடுமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வா யன்று காவல்துறை பதிவு செய்த பொய் வழக்கில் இருந்து ஜெகதீசன் விடுதலை செய்ப்பட்டார். பணம் பெறாமல் திறமை யாக வழக்கை நடத்தி வெற்றி பெற செய்த வழக்கறிஞர் சிவக்குமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், மடத்துகுளம் தாலூ காச் செயலாளர் ஆர்.வி.வடிவேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஜோசப் மற்றும் பொய் வழக்கில் விடுதலையான ஜெகதீசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.