districts

img

ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, செப். 24- சட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட தினத்தை சிஐடியு கருப்பு தினமாக அனுசரிக்கும் ஒருபகுதியாக, கோவை யில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர் சங் கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக் கையை கண்டித்தும், சட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட 2020 செப். 23 ஆம்தேதியை கருப்பு தினமாக அனுசரிக் கும் வகையில், கவுண்டம்பாளையத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், டிஎன்சிஎஸ்சி - சிஐடியு சங் கத்தின் மாநிலப் பொருளாளர் எம். ஏழுமலை, சங்கத்தின் மண்டலச் செயலாளர் எம்.திருக்குமார், சிஐடியு மாவட் டத் தலைவர் கே.மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திராளானோர் பங் கேற்றனர்.