ஆற்காட்டில் பவுட்டா பீடி நிறுவனம் கடந்த 15 நாட்களாக வேலை வழங்காமல், சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், வேலை இல்லாத நாட்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி சிஐடியு பீடித் தொழிலாளா் சங்கம் சார்பில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே தலைவா் சுப்பிரமணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சம்மேளனத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டத் தலைவா் காத்தவராயன், மாவட்டச் செயலா் வி.நாகேந்திரன், சி.சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.