திருப்பூர், ஏப்.18- சிறு தவறுகளுக்கு கூட ஆன் லைனில் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் பறிப்பதை கண் டித்து திங்களன்று சிஐடியு தலை மையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவேசமிகு போராட்டங்களில் ஈடு பட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள மோட்டார் வாகன சட் டத்தை காரணம் காட்டி ஆன்லை னில் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகி றது. இது ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அன்றாடம் ஏறி வரும் பெட்ரோல், டீசல் எரி பொருட்களின் விலை உயர்வி னால் விழி பிதுங்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் போக்குவரத் துத்துறையின் இத்தகைய அப ராத நடவடிக்கையால் பெரும் அவ திக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிடு வது என்கிற சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் முடிவின் அடிப்படையில் திங்களன்று பல் வேறு இடங்களில் ஆவேசமிகு போராட்டங்கள் நடைபெற்றன. திருப்பூர் ரயில் நிலையம் முன்பு திங்களன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் டி.வி.சுகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எஸ். சிவரா மன், மோட்டார் சங்க மாவட்ட செய லாளர் அன்பு, மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகி யோர் சிறப்புரை ஆற்றினர். இப் போராட்டத்தில் காரணம்பேட்டை, கருவலூர், அவநாசி, அனுப்பர் பாளையம், ராயபுரம், மிஷின் வீதி, புதுக்காடு மற்றும் கருவம்பாளை யம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகை போராட் டத்திற்கு சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இரா.செல்வம் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதனைத்தொ டர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இத னையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக, சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணை பொதுச் செயலாளர் எம்.கே.முத்துக் குமார், பொருளாளர் எம்.மைக்கில் சாமி மற்றும் கே.பழனியப்பன், பி.சி.முருகன் உள்ளிட்ட தலைவர் கள் மத்திய வட்டார போக்கு வரத்து துறை அதிகாரி சத்திய மூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். சிஐடியு தலைமையில் ஆட்டோ ஓட்டுநர் களின் முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பர பரப்பு ஏற்பட்டது.