திருப்பூர், அக். 21– திருப்பூர் அனுப்பர்பாளையம் சந்தைபேட்டை பகுதியில் சனிக்கிழமை புதிதாக சிஐடியு ஆட்டோ சங்கம் தொடங்கப்பட்டது. இந்த விழாவுக்கு சிஐடியு திருப்பூர் ஆட்டோ தொழி லாளர் சங்கத் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். திருப்பூர் மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு மற்றும் பொருளாளர் அருண், துணைச் செயலாளர் சம்பத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் சந்தைப்பேட்டை ஆட்டோ தொழிலாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.