districts

img

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு

டிச.15 தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளில் மாநிலம் முழுவதும் சிஐடியு கொடியேற்றம்

சென்னை, டிச. 13 - சிஐடியு ஸ்தாபக பொதுச் செயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் டிச.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டு கொடியேற்றும் நிகழ்வு நடை பெறவுள்ளது. சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23 முதல் 27  வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாநாட்டுக்கான பிரச்சா ரம் தீவிரமாக நடந்து வருகின்றது. மாநாட்டு செய்திகளை மக்களி டையே கொண்டு சேர்க்கும் வகையில் நவம்பர் 16 அன்று மாநிலம் முழுவதும் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. டிசம்பர் 11 தமிழகம்  முழுவதும் உண்டியல் மூலம் நிதி திரட்டும் இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 15 அன்று சிஐடியு கொடிநாள் நிகழ்வு நடைபெறுகிறது. அன்றைய தினம் சிஐடியு உறுப்பினர்களின் வீடுகள் , தொழிற்சாலை வாயில்கள், பணி யிடங்கள், சங்க அலுவலகங்கள் போன்ற  இடங்களில் அகில இந்திய மாநாட்டு கொடியேற்றப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதி வாரத்தில் சிஐடியு உறுப்பி னர்களின் குடும்ப உறுப்பினர்களின் ‘குடும்ப சங்கமம்’ நிகழ்வு நடைபெற உள்ளது.

;