தருமபுரி, மார்ச் 19- விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம், சிஐ டியு, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ண யம் செய்ய வேண்டும். வேளாண் பொருட் களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சிறு, குறு தொழில் கடன்கள் மற்றும் விவ சாய கடன் விவசாய தொழிலாளர்கள் பெற் றுள்ள கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெறுவதுடன், மின் சார சட்டத்திருத்த மசோதா 2022-யை திரும்பப்பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.5 ஆம் தேதியன்று தில்லி பெருந்திரானோர் பங்கேற் கும் பேரணி நடைபெற உள்ளது. இப்பேர ணியை விளக்கி சிஐடியு, விவசாயிகள் சங் கம், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார் பில் தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. தருமபுரி நகரம், அண்ணாசாகரத்தில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்திற்கு சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா தலைமை ஏற்றார். இதில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மண்டல தலைவர் எஸ்.சண் முகம், மண்டல செயலாளர் சி.முரளி, பொரு ளாளர் முருகன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அங்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயணம் எஸ்வி சாலை, வேல் பால் டிப்போ, சந்தைபேட்டை வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நிறைவ டைந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பள்ளிப் பட்டியில் சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் டி.லெனின் மகேந்திரன் தலைமையில் நடைபயணம் துவங்கியது. இதில், மின் ஊழி யர் மத்திய அமைப்பின் கோட்டத் தலைவர் எஸ்.பி.சிவகுமார், கோட்ட செயலாளர் கே. ஜெகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி, மலைவாழ் சங்க மாவட்ட தலைவர் ஏ.அம்பு ரோஸ், பால் உற் பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தீர்த்தகிரி, மாதர் சங்க வட்ட செயலாளர் பி. கிருஷ்ணவேணி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கணேசன், டி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தி.வ. தனுசன் வாழ்த்தி பேசினார். பி.பள்ளிபட்டி யில் துவங்கிய நடைபயண பிரச்சாரம் பொம் மிடியில் நிறைவு பெற்றது. காரிமங்கலத்தில் துவங்கிய நடைபயண பிரச்சாரத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் சி.கலாவதி தலைமை ஏற்றார். இதில், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் லில்லிபுஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா, கட்டுமான சங்க ஒன்றிய செயலாளர் கே.எம்.முருகேசன், விவசாயிகள் சங்க வட்ட தலைவர் பி.பி.ராஜா, வட்ட செயலாளர் மாது, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் பி. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இப்பிரச்சாரம் சிக்கதிம்மன அள்ளி வரை நடைபெற்றது. பாலக்கோடு வட்டம், பல்லும்பட்டியில் விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் பி. முருகன் தலைமையில் நடைபயணம் துவங் கியது. இதில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாகராசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பாண்டி யம்மாள், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செய லாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயணம் பாலக்கோட்டில் நிறைவுபெற்றது.
ஈரோடு
இதேபோல ஈரோடு மாவட்டம், பெருந் துறை தாலுகா, சிறுக்களஞ்சி – கரட்டுப்பாளை யத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகாக்குழு உறுப்பி னர் எஸ்.பி.சுப்பிரமணி, பொன்னுசாமி, பழனி சாமி ஆகியோர் தலைமை ஏற்றனர். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.குமார் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. எம்.முனுசாமி, ஊத்துக்குளி தாலுகா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி. சிஐடியு தலை வர் கே.குப்புசாமி, உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகர், டீச்சர்ஸ் காலனியில் தொடங்கிய பிரச்சாரம் சூரம்பட்டி, சூரம்பட்டி நால் ரோடு, கொல்லம்பாளையம் வழியாக அண்ணாமார் பெட்ரொல் பங்க் அருகில் நிறைவடைந்தது. இவ்வியக்கத்திற்கு சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் என்.முரு கையா தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மாத வன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் செய லாளர் ஸ்ரீதேவி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென் னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஈரோடு மாநகர் மற்றும் மாவட் டத்தின் பல பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.