districts

img

ரயில்வே கோட்ட மேலாளரிடம் சிஐடியுவினர் மனு

மேட்டுபாளையம், ஆக. 22- மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் வியாழனன்று ஆய்வில் ஈடுபட்டார். இவரி டம், மேட்டுபாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவ தற்கான கோரிக்கைகளை சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனுவாக அளித்தனர்.  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா ஆய்வு  மேற்கொண் டார். அப்போது, மேட்டுப்பாளையம் தாலூகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மனுவினை அளித்த னர். அதில், மேட்டுப்பாளையம்-கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க  வேண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள்  இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து  திருநெல்வேலி தூத்துக்குடி சேவையினை தினசரி ரயில்  சேவையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்தனர்.              இந்த ஆய்வின்போது, ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள்  மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலா ளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.