நாமக்கல், ஜூலை 31- திருச்செங்கோடு அருகே கந்து வட்டி கொடுமையால் பெற்றோரை இழந்த குழந்தைகள் தவித்து வந்த நிலையில், அவர்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு சிஐடியுவினர் காத்திருப்பு போராட்ட அறிவிப்பையடுத்து, விரைந்து வீட்டுமனை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டைச் சேர்ந்த விசைத்தறி தொழி லாளி சுப்பிரமணி – மேனகா தம்பதி யினர் கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங் கியுள்ளனர். கொரோனா பொதுமுடக்க காலம் என்பதால் வாழ்வாதாரம் தவித்த சுப்பிரமணி, வாங்கிய கடன் தவணை கட்ட முடியவில்லை. இதனால், கந்து வட்டி கும்பலின் பாலியல் ரீதியான மிரட் டலால், மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு, குடும்பத்திலிருந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்ட னர். இதில், மகள் பூஜா ஸ்ரீ (17), மகன் நவீன் (14) ஆகியோர் உயிர் பிழைத்த னர். பெற்றோரை இழந்த குடும்பத்திற்கு வீட்டுமனையும், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நிவாரணம் வழங்க வேண்டும். திம்மரத்தம்பட்டி தலித் சமூகத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சண்முகத்தின் நான்கு தறி களை ஆக்கிரமித்துக் கொண்ட ஆதிக்க சாதியினர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங் கம் சார்பில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத் திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் இளவரசி தலை மையில் திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னி லையில் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். இதில், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.மோகன், மாவட்ட செயலாளர் எம்.அசோகன் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எம்.சண் முகம், பி.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த் தையில், விசைத்தறி தொழிலாளி பிரச்ச னையை விசாரித்து முடிவெடுப்பது என வும், முடிவு எட்டாத நிலையில் வழக் குப்பதிவு செய்து விசாரிப்பது என உத் தரவாதம் அளித்தனர். மேலும், கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த குடும்பத்திற்கு மிக விரை வில் வீட்டுமனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கிடைப்பது உறுதிப் படுத்தப்படும். குழந்தைகள் நல அமைப் பின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை நின்றுவிட்டது. அதனை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் இளவரசி உத்தரவாதம் அளித்தார்.