பள்ளிபாளையம், பிப்.18- கூலி உயர்வு கேட்டு குமார பாளையத்தில் விசைத்தறி தொழி லாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந் தது. இதனையடுத்த விசைத்தறி தொழிலாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில், கடந்த 18 நாட் களாக விசைத்தறி கூலி தொழி லாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.இவர்களுக்கு ஆறு விசைத்தறி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆத ரவு தெரிவித்து உள்ளனர். இந் நிலையில், அரசு அதிகாரிகள் மற் றும் விசைத்தறி உரிமையாளர்கள், அடப்புத்தறி உரிமையாளரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கூலி உயர்வு பேச்சுவார்த்தை வட் டாட்சியர் சண்முகவேல், சேலம் தொழிலாளர் துறை இணை ஆணையர் சமரசம், திமுக நகரச் செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணி, நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. இதில், அடப்பு தறி உரிமையா ளர்கள் தொழிலாளர்களுக்கு 12 சதவிகிதம் கூலி உயர்வு தருவ தாக கூறினர். இந்த உயர்வை தொழிற்சங்க கூட்டமைப்பினரும், விசைத்தறி தொழிலாளர்களும் ஏற்று கொள்ளவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாகவே விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு என்பது வழங்கப்படவில்லை. எனவே, குறைந்தபட்சம் 20 சதவிகிதம் கூலி உயர்வை வழங்க வேண்டும் என்றனர். இதனை அடைப்பு கூலி உரிமையாளர்கள் ஏற்காததால், கூலி உயர்வு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை திங்களன்று திருச்செங்கோடு வரு வாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் கோட்டாட்சியர் கௌசல்யா முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள், இரண்டு வாரங்கள் மேலாக போராடி வருகிறோம். குழந்தை கள், குடும்பத்தில் உள்ளோர் வேலைக்கு செல்லாததன் காரண மாக பசியால் வாடுகிறோம். அரசு துறை அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர் என தெரிவித்து, 300-க்கும் மேற்பட்டோர் வட்டாட் சியர் அலுவலக நுழைவு வாயி லின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள், தொழிற்சங்க கூட்ட மைப்பினர், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி நிச்சயம் 20 சத விகிதம் கூலி உயர்வை பெற்று தருவோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதன் காரண மாக அந்த பகுதியில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. குமாரபாளையத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்த றிகள் இயங்கி வருகிறது. தொடர் ந்து விசைத்தறி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருவதால், தினந்தோறும் ஒரு கோடி ரூபாய் அளவிலான ஜவுளிகள் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. தொழிலாளர்களும் வரு மானமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் தலை யிட்டு உரிய தீர்வு பெற்று தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிஐடியு மற்றும் விசைத்தறி தொழிற்சங்க கூட்ட மைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.