districts

img

சங்ககிரியில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம், ஏப்.12- சங்ககிரியில் புதிதாக கட்டப்பட்ட தீய ணைப்பு நிலைய அலுவலர், வீரர்கள் குடி யிருப்புக் கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ் வாயன்று திறந்து வைத்தார். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலை யில் 8 ஆயிரத்து 608 சதுரடியில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில், சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் குடியிருப்பு கட்டி டம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயல கத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கிடையே சங்க கிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பி.தங்கமுத்து குத்துவிளக்கேற்றி வைத்தார். இதில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவ லர் எம்.வேலு, உதவி அலுவலர் சி.முருகே சன், சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவ லர் டி.அருள்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.