திருப்பூர், ஜூன் 18- திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச் சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவ தும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 4,825 பேரும், மாணவி யர்கள் 2,941 பேரும் என மொத்தம் 7766 பேர் பங்கேற்றனர். கல்லூரி பிரிவில் மாணவர்கள் 2,244 பேரும், மாணவியர் கள் 1,169 பேரும் என மொத்தம் 3,413 பேர் பங்கேற்றனர். இதில் 1675 பேர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றதையடுத்து அவர்க ளுக்கு ரூ.34 லட்சத்திற்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக, முதலமைச்சர் கோப்பை 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கையுந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த னர்.