districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு கூலி வழங்காமல் இழுத்தடிக்கும் சேரன் கல்லூரி நிர்வாகம்: சிஐடியு தலைமையில் பேரணி

திருப்பூர், செப். 26- 55 நாட்களுக்கு வழங்க வேண்டிய கூலியை வழங்காமல் இழுத்தடிக்கும் சேரன்  கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு தலைமையில் புதனன்று தூய்மைப் பணியா ளர்கள் பேரணியாக சென்று மாவட்ட துணை  கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். காங்கேயம் தாலுகா திட்டுப்பாறையில் அமைந்துள்ள சேரன் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 23 தூய்மைப் பணியாளர்கள்  கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை பணி  செய்து வந்தனர். இந்த தொழிலாளர்களுக்கு 55 நாட்களுக்கு வழங்க ஊதியத்தை கல் லூரி நிர்வாகமும், யுடிஎஸ் ஒப்பந்த நிர்வாக மும் வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையம், மாவட்ட ஆட் சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை யடுத்து புதனன்று மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட துணை காவல்  கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாக கூறியதால், சிஐடியு ஊரக  வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மாவட்டச்  செயலாளர் கே.ரங்கராஜ் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் காங்கேயம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவ லகம் வரை ஊர்வலமாக சென்று உடனடியாக  கூலி வழங்கக்கூறி மனு அளித்தனர். மனுவை  பெற்றுக்கொண்ட துணை காவல் கண்கா ணிப்பாளர் மாயவன் இன்னும் இரண்டு நாட்க ளுக்குள் கூலி பெற்ற தர நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். இதில், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் கே.திருவேங்கடசாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் எஸ்.தங்கவேல், ஆர்.நாச்சி முத்து உட்பட மாநகராட்சி, நகராட்சி பேரூ ராட்சி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.