districts

img

சௌடேஸ்வரி கல்லூரியை மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கவில்லை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

சேலம், ஏப்.7- சேலம் சௌடேஸ்வரி கல்லூ ரியை மகளிர் கல்லூரியாக மாற் றம் செய்ய ஒப்புதல் வழங்க வில்லை என பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவித்துள் ளார். சேலத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டு சௌடேஸ்வரி அரசு உதவி பெறும் ஆடவர் கல்லூரி துவங்கப்பட்டது. இதன்பின்னர் இக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு இருபாலர் கல்லூரியாக மாற்றப் பட்டது. இந்நிலையில், சேலம் சௌடேஸ்வரி கலைக் கல்லூ ரியை அரசு மகளிர் உதவி பெறும் கல்லூரியாக மாற்றுவதற்கு வழி செய்யும் வகையில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தின் முன் அனுமதி யைப் பெற்று அரசு மகளிர் உதவி  பெறும் கல்லூரியாக மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இச்சூழலில்  புதனன்று சேலம் சௌடேஸ்வரி அரசு உதவி பெறும்  மகளிர் கல்லூரி என்று கல்லூரி நிர் வாகம் விளம்பரப்படுத்தி உள் ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் ஏழை, எளிய  மாணவர்களின் உயர்கல்வி தடை பட்டு தனியார் கல்லூரியை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து இந்திய மாண வர் சங்கத்தின் தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேலம் பெரியார் பல்கலைக் கழ கத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் துணைவேந்தர் ஜெகநாதனை சந் தித்து மனு அளித்தனர். ஒப்புதல் வழங்கவில்லை அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில், இது வரை சேலம் சௌடேஸ்வரி கல் லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றும் முடிவிற்கு பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு ஒப்புதல் வழங்கவில்லை. அரசாணை வெளியிட்ட நிலையில் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு குழு அமைத்து, மேற்கண்ட கல்லூரி யில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேநேரம், இருபாலர் கல்லூ ரியை மாற்ற தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் கோரிக் கையை அரசுக்கு தெரியப்படுத்து வதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, இப்போராட்டத் தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கவின்,  மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டார்வின், முத்துக்குமரன், மாநகர செயலாளர் அருண்குமார், மாநகர தலைவர் கபிலன் மற்றும்  சேலம் சௌடேஸ்வரி கல்லூரி யின் மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.