உதகை, மே 22- உதகையில் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து சதமடித்து உள்ளது. இதன்படி மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளை கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற் றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்ப னைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சம வெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் ஆகியவை சரக்கு வாகனங் கள் மூலம் உதகை உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுக ளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங் களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது உதகை மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கும், சில் லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.120 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி 2,000 கிலோ தக்காளி கொண்டு வரப்படுகிறது. அதில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 75 சதவிகிதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதி களில் இருந்து 25 சதவிகிதமும் கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகம், கர்நாடகா உள்பட தென்மாநிலங்க ளின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவ தால் கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு பருவ மழையும் தொடங்க உள்ளதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள் ளனர்.