districts

img

மத்திய தொழிற்சங்கத்தினர் வாகனப் பிரச்சாரம்

சேலம், பிப்.13- தொழிலாளர் விரோத நான்கு  சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில், வாகனப் பிரச் சாரம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய மோடி அரசு தொடர்ச்சி யாக தொழிலாளர் நலனுக்கு எதி ராக, தொழிலாளர்களுக்கு விரோத மான சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பொதுத் துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்த்தல், அவுட் அசார்சிங் முறையை கடைப்பிடித் தல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி களை தொழிலாளர்கள் மத்தியில்  பூர்த்தி வருகின்றனர். இத்தகைய போக்கை கைவிட்டு, நான்கு தொழி லாளர் நல சட்ட தொகுப்புகளை உட னடியாக ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் நலன் காக்கும் திட் டங்களை உருவாக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்ட பட் ஜெட்டில் விவசாயிகள், தொழிலா ளர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவருக்கும் எதிராக உள் ளதை மக்களிடையே அம்பலப்ப டுத்தி, மத்திய தொழிற்சங்கத்தினர் வியாழனன்று வாகன பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ளனர். சேலம் ஜங்ஷன், உழவர் சந்தை  பகுதியில் துவங்கிய வாகனப் பிரச் சார இயக்கம், திருவாக்கவுண் டனூர் நெடுஞ்சாலை, ஐந்து ரோடு,  அஸ்தம்பட்டி வழியாக போக்கு வரத்து பணிமனையில் நிறை வடைந்தது. சிஐடியு சாலைப்  போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன்  தலைமையில் நடைபெற்ற இந்த  இயக்கத்தில், சிஐடியு மாவட்டச்  செயலாளர் ஏ.கோவிந்தன், பொரு ளாளர் இளங்கோ, நிர்வாகி பி. பன்னீர்செல்வம், எல்பிஎப் நிர்வாகி கள் பொன்னி, பழனியப்பன்,  எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், ஏஐடி யுசி நிர்வாகிகள் முனுசாமி, பரமசி வம், ஐஎன்டியுசி நிர்வாகிகள் நடரா ஜன், கிருஷ்ணன், ஏஐயுடிசி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.