districts

img

இ டென்டர் முறையை ரத்து செய்ய கோரி சிஐடியூ மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஆக.31- மின்வாரியத்தில் தொழி லாளர்களுக்கான இ டென்டர் முறையை ரத்து செய்ய வலி யுறுத்தி உடுமலை மின்வாரிய  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக சிஐடியூ  மின் ஊழியர் மத்திய அமைப்பு  சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மின்வாரிய ஊழியர்க ளுக்கு வழங்காமல் இருக்கும்  ஊதிய உயர்வு தொகையை உடணடியாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்பொழுது உள்ள மின்  இணைப்புகளுக்கு டோட்டெக்ஸ் முறையில் சுமார்ட் மீட்டர் அமைக்கும் திட்டத்திற்கு அறி விக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை தமிழக  அரசு கைவிட வேண்டும். பல மாதங்களாக வழங்காமல் இருக்கும் இரட்டிப்பு ஊதியம்,  பயணப்படி, பொது வருங்கால வைப்பு  நிதி கடன்களை அனைவருக்கும் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய  உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண் டும். தொழிலாளர்களுக்கான இ.டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்.  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத் திய அமைப்பின் உடுமலை கோட்ட திட்ட  தலைவர் ஜெகானந்தா தலைமை வகித்தார்.  மத்திய அமைப்பின் நிர்வாகிகள் திருநாவுக் கரசு, கிருஷ்ணகுமார், பாலசுப்பிரமணியம் மற்றும் கோவிந்தன் உள்ளிட்ட திரளான மின்  ஊழியர்கள் கலந்து கொண்டனர்.