சேலம், ஜூன் 16- சேலம் மாவட்டம் முழு வதும் கடந்த இரண்டு தினங் களாக மத்திய அதிவிரைவு படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி யன்று ஆய்வு மேற்கொண் டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் உட்கோட் டத்திற்கு உட்பட்ட கொளத் தூர், மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் நடைபெறும் குற்ற சம்ப வங்கள் குறித்து மத்திய அதிவிரைவு படை துணை ஆணையாளர் பிஜூ ராம், சைலஜா தலைமையில் 35க்கும் மேற்பட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மொழி, இனம், மக்கள் தொகை ஆகியவை குறித்து கணக்கெடுத்தனர். இதனையடுத்து, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள் ளவும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் கர்நாடகா வனத்துறையினர் தமிழக மீனவர் ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலை யில், அந்த பகுதிகளையும் ஆய்வு மேற் கொண்டனர். தற்பொழுது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறக் கப்படும் சூழ்நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் பேரிடர் மீட்பு பணிகளை மேற் கொள்ளவும், அதனை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டனர். மேலும் மேட்டூர் அணை வலது கரையில் ஆய்வு மேற்கொண்டனர்.