districts

புதிய தொழிற்நுட்பத்தினால் செல்போன் திருட்டு குறைய வாய்ப்பு

கோவை, ஜூலை 7- குற்றப்பிரிவு காவல் துறையில் புதிய தொழில் நுட்பத்தின் வருகை யால், செல்போன் திருட்டு குறை யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய தொழிற்நுட்ப வளர்ச்சி நாளுக்கு, நாள் வளர்ந்து வரு கிறது. அதேநேரத்தில், சைபர் குற்ற சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. தொழிற் நுட் பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி யாக தனி மனித பயன்பாட்டிற்கு செல்போன் நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. செல் போன் இல்லாவிட்டால் இயங்க முடியாது என்கிற நிலைக்கு நக ரத்தில் உள்ளவர்களை நவீன தொழில்நுட்பம் தள்ளி விட்டது. டிஜிட்டல் பண பரிமாற்றம், ஆன் லைன் செயலி மனிதனுக்கு அலைச் சல் இல்லாமல் பணிகளை சுருக்கி னாலும், தற்பொழுது அதிலும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. ஆன் லைன் மோசடிகளும், செல்போன் திருடர்களும் அதிகரித்து வரு கின்றனர்.  இந்நிலையில், செல்போன்கள் திருட்டு போனால் அந்த செல்போ னில் ஐஎம்இஐ என்று அடை யாள நம்பரை வைத்து செல்போன் திருடிய ஆசாமிகளை கண்டறிவார் கள். செல்போன் திருட்டு தொடர் பாக ஏராளமான புகார்கள் வந் தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் மட்டுமே கண்டறிந்து கொடுத்து வந்தனர். தற்பொழுது சிஇஐஆர் (சென்ட்ரல் எக்யூப் மென்ட் ஐடன்டி ரிஜிஸ்டர்) என்ற நவீன தொழில் நுட்பம் அறிமுக மாகி உள்ளது. கோவை மாவட்டத் தில் தற்போது இந்த புதிய தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது. இதன் மூலம் பெரும்ப குதி செல்போன் திருட்டை தடுக்க முடியும் என போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  புதிய தொழில்நுட்பம் குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் திருடு போன செல்போன்கள் கண்டறியப்படுகிறது. இதற்காக கோவை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் இந்த சிஇஐஆர் என்ற போர்டலில் இணைந்து உள் ளது. இந்த தொழில் நுட்பம் விலை மதிப்பற்றதாக மாறி உள்ளது. ஒருவரது செல்போன் தொலைந்து போனால் உடனடியாக சம்பந்தப் பட்டவர்கள் ஆன்லைன் மூலம் சிஇஐஆர் இணையதளத்துக்கு சென்று தனது செல்போன் தொலைந்து போனது தொடர்பான தகவலை கூறி முடக்கம் செய்ய வேண்டும். போலியான நபர்கள் இதுபோன்று வேறு செல்போன் களை முடக்கி விடக் கூடாது என்ப தற்காக, ஆன்லைன் மூலம் அளிக் கப்பட்ட புகார் காவல் துறையால் வழங்கப்பட்ட சிஎஸ்ஆர் (பதிவு ரசீது) மற்றும் சம்பந்தப்பட்டவர் களின் அடையாள சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்டவற்றின் நகல்களை இணைத்து புகார் செய்ய வேண் டும். 24 மணி நேரத்தில் சம்பந்தப் ப்பட்ட செல்போன் முடக்கி வைக் கப்பட்டு விடும். மேலும் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களுக்கும் இந்த சிஇஐ ஆர் தொழில்நுட்பம் இணை யத்தில் இணைக்கப்பட்டு உள்ள தால் அவர்களுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டு விடும். திருட்டு போன செல்போனின் உரிமையாளர் அதே எண்ணுடன் கூடிய புதிய சிம் கார்டை பெற்று வேறு புதிதாக போன் வாங்கி பயன்படுத்தலாம். திருட்டு ஆசாமி கள் அந்த எண்ணை பயன்படுத்த முடியாமல் முடக்கப்பட்டு விடும். அவ்வாறு முடக்கப்பட்ட பின் திருட்டு ஆசாமியால் வேறு சிம் கார்டை தாங்கள் திருடிய செல் போனில் செருகினால் அந்த செல் போனில் விலாசம் உள்ளிட்ட விப ரங்களும் செல்போன் கோபுரம் மூலம் தெரிந்துவிடும். இதனால் போலீசார் எளிதில் செல்போனை திருடிய நபர்களை கண்டறிந்து விடுவார்கள். இது செல்போன் திரு டர்களுக்கு வைக்கப்பட்ட முற்றுப் புள்ளி ஆகும். மேலும் திருடு போன செல்போன்களையும் எளிதாக கண் டறிய முடியும் என்றும் அதிகாரி கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், செல்போன் களை குறிவைத்து திருடும் மாஃபிய கும்பல்கள், செல்போன்களை திரு டிய உடன் அதனை தனித்தனி பாகங்களாக பிரித்து விடுகிறது. திருடி செல்போனை அப்படியே பயன்படுத்தினால்தான் இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிடிக்க முடியும். ஆனால், தனித் தனியாக பிரித்து விட்டால் ஒன்றும் செய்ய இயலாது. இந்த பாகங் களை பெருவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட சந்தையும் இயங்கு கிறது. இதனையும் கண்டறிந்தால் மட்டுமே செல்போன் திருட்டுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்க முடியும் என பெயர் சொல்ல விரும்பாத போலீஸ் அதி காரி ஒருவர் தெரிவித்தார்.