districts

தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டம்

கோவை, செப்.15- தடையை மீறி பேருந்து தின  கொண்டாட்டத்தின் போது சாலை யில் பட்டாசு வெடித்து நடனமாடிய கல்லூரி மாணவர்களால் மற்ற பயணிகள் அவதிக்குள்ளாகினர் வழக்கமாக கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்கள் பயணிக்கும் பேருந்துகளில் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்து முன் பக்கம் மாலைகளை தொங்கவிட்டு பேருந்து தின (பஸ் டே) கொண்டாடு வார்கள். பேருந்தில் ஏறி தாரைப் தப் பட்டை முழங்க, ஆக்ரோஷமாக கத்துவார்கள். பேருந்து அவர்கள் வழக்கமாக கல்லூரி செல்லும் பாதை யில் பயணிக்கும். இதனால் மாணவர் கள் என்னதான் உற்சாகம் அடைந் தாலும் இதர பயணிகள் படும் அவதி  ஆத்திரத்தையே வரவழைக்கும்.  இதோடு மட்டுமில்லாமல் பல  சமயங்களில் ‘பஸ் டே’ கொண்டாடும்  மாணவர்களுக்கு இடையே பிரச் சனை ஏற்பட்டு மோதலில் முடிந் திருக்கின்றன. மகிழ்ச்சியை தாண்டி  இது போன்ற கொண்டாட்டங்களில சிரமங்களும் இருக்கவே செய் கின்றன. பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கல்லூரி மாண வர்கள் பஸ் டே கொண்டாட சென்னை  உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. தடையை மீறும் மாணவர் களை கைது செய்யவும் உயர்நீதி மன்றம் தன் உத்தரவில் கூறியுள் ளது.  இந்நிலையில், தடையை மீறி  கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவினாசி சாலையில் திருப்பூர் செல்லும் தனி யார் பேருந்தில் பஸ் டே கொண் டாடிய காட்சிகள் தற்போது சமூக  வலைதளங்களில் பரவி வருகிறது.  சாலைகள் பரபரப்பாக காணப்படும்  காலை வேளையில் பேருந்து பயணி கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு முன்பாக தாரை தப்பட்டைகள் முழங்க சினிமா பாடலுக்கு குத் தாட்டம் போட்ட மாணவர்கள், கணி யூர் சுங்கச்சாவடி அருகே பேருந்தை  நிறுத்தி ஆட்டம் பாட்டத்துடன், கேக்  வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும், அதனை போட்டோ மற்றும் வீடியோ  எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அப்போது கல்லூரி மாண வர் ஒருவர் ஆர்வ மிகுதியால் பேருந் தின் மீது ஏறி மாணவர்களின் குத்தாட்டத்தை செல்போனில் படம் பிடித்த சம்பவமும் அரங்கேறியது.  இது தொடர்பான வீடியோ பேஸ் புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது. பஸ் டே கொண்டாட்டங்களுக்கு தடை அமலில் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவை யில் பஸ் டே கொண்டாடும் கலாச் சாரம் தலை தூக்கி வருவதாக கூறும்  பேருந்து பயணிகள், பஸ் டே கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் உரிமையாளர் மீது  சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க  வேண்டும் கோரிக்கை விடுக்கின் றனர்.