நாமக்கல், மே 23- பரமத்திவேலூர் அருகே பட்டதாரி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசி ஐடி விசாரணை துவங்கியது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கடந்த மார்ச் 11 ஆம் தேதியன்று ஆடு மேய்த்து கொண்டிருந்த பட்டதாரி இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு, கொடூரமான முறையில் கொலை செய் யப்பட்டார். இதுதொடர்பாக 17 வயது சிறு வன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். இந்நிலையில், மேற்கண்ட சம்ப வத்தில் தொடர்புடைய உண்மையான குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும். இவ் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் விளைவாக இவ்வழக்கை சிபிசிஐடிக்கு தமிழ் நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாமக்கல் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிரபா, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார், கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி ஆய்வாளர் பிரபா விடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி ஆய்வாளர் பிரபா தலைமையிலான காவல் துறையினர், அவ ரது கணவர் மற்றும் குடும்பத்தினர், உறவினர் களிடம் விசாரணை நடத்தி, வாக்கு மூலங் களை பதிவு செய்தனர். மேலும், கொலை நடந்த இடத்தையும், அப்பகுதியில் உள்ள பொது மக்களிடமும் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். சிபிசிஐடி போலீசாரின் முழு விசார ணைக்கு பிறகே கொலை சம்பந்தமான உண்மை தெரியவரும் எதிர்பார்க்கப்படு கிறது.