தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டை உலி மங்கலத்தை சேர்ந்தவர் சில்பா (19), ரூபேஷ் (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.சில்பாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சமடைந்தனர். திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சில்பா, ரூபேஷ் ஆகியோர் திருமணம் செவ்வாயன்று (மார்ச் 17) சந்திரசூடேஷ்வரர் கோவிலில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, வட்டச் செயலாளர் கணேஷ், தலைவர் பட்டாபி, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா, வாலிபர் சங்க வட்ட நிர்வாகிகள் சங்கர், திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.