districts

கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்திடுக

நாமக்கல், ஜன.8- கரும்பு போன்று, மரவள்ளிக் கிழங்கிற்கும் கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என நாமக்கல் லில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரவள்ளி  கிழங்கு விவசாயிகள், ஆலை உரி மையாளர்கள், மாவட்ட நிர்வாகம் உடனான முத்தரப்பு கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்தார். மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் முன்னிலை வகித்து பேசுகையில், தமிழ்நாட்டில் ஜவ்வ ரிசியின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற் கட்டமாக முதலமைச்சரின் காலை  உணவு திட்டத்தில் ஜவ்வரிசி பயன் படுத்த முதல்வரின் கவனத்திற்கு  கொண்டு சென்று நடவடிக்கை எடுக் கப்படும். மரவள்ளிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவும், கூட்டு றவு முறையில் ஜவ்வரிசி ஆலை யினை தொடங்கவும், மரவள்ளி யிலிருந்து எத்தனால் உற்பத்தி செய் திட அரசுக்கு முன்மொழிவு அனுப் பிடவும் உரிய நடவடிக்கை எடுக் கப்படும். ஜவ்வரிசியின் தேவை களை அதிகரிக்கும் பட்சத்தில் விவ சாயிகளுக்கு உரிய விலை கிடைக் கும். அனைத்து சேகோ பொருட்க ளும் சேகோ சர்வ் மூலமாக கொள் முதல் செய்வதை உறுதி செய்வதற் காக மாவட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசிக்கு ஒரே மாதிரி யான ஜிஎஸ்டி நிர்ணயம் செய்ய  ஜனவரி மாத இறுதியில் நடைபெ றும் நிதிக்கலந்தாய்வுக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி குழுவிற்கு பரிந் துரை செய்யப்படும். மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையம் நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப் படும், என்றார். மேலும், நாமக்கல் மாவட்டத் தில் மரவள்ளிக்கிழங்கு விலை ஏற் றத்தாழ்வை தடுக்கும் விதமாக கரும்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுவது போல், மரவள்ளிக் கிழங்கிற்கும் கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். மரவள்ளிக்கிழங்கினை மதிப் புக் கூட்டப்பட்ட பொருளாக மாற் றம் செய்து விற்பனையை அதிகப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். மரவள்ளியில் செம்பேன்,  வெள்ளைப்பேன் பூச்சித்தாக்கு தல் அதிகமாக இருப்பதால் விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். புயல் மழையினால் பாதிக்கப்பட்ட மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும். ஒரு டன் மர வள்ளிக்கிழங்கிற்கு 50 கிலோ மண்  கழிவு செய்யப்படுவதை மறுபரி சீலினை செய்ய வேண்டும். நாமக் கல் மாவட்டத்தினை தேசிய தோட் டக்கலை இயக்கத்தில் சேர்த்திட பரிந்துரை செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். ‘அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்’ என மாவட்ட ஆட்சியர் ச. உமா தெரிவித்தார். இந்நிகழ்ச்சி யில் சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதி வாளர் க.பா.அருளரசு, வேளாண் இணை இயக்குநர் கலைசெல்வி, துணை இயக்குநர்கள் புவனேஸ் வரி, நாசர், ஏத்தாப்பூர் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் வெங்கடாசலம், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாய சங்க  பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.