தலித் பெண்ணிடம் தகாத செயல் 5 பிரிவுகளில் கீழ் வழக்கு - ஒருவர் கைது
ஈரோடு, செப்.5- கொடுமுடி அருகே தலித் பெண்ணிடம் தகாத முறையில், சாதி ஆதிக்க வெறியில் நடந்து கொண்டவரை காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், பாசூர் அருகே உள்ள வேங்கியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமூகத் தைச் சேர்ந்த சுந்தர்ராஜ். இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவார். இவரது மனைவி தேவி, கடந்த ஞாயிறன்று ஆடு களை சாலையோரம் மேய்த்து கொண்டி ருந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுந்த ரேஸ்வரன் என்பவர், ஆதிக்கசாதி திமிரில் தேவியை வல்லுறவுக்கு அழைத்துள் ளார். மேலும், தேவியின் வீட்டிற்கு சென்று தெருவில், மிகவும் அருவருப்பான வார்த்தை களால் திட்டி, பாதிக்கப்பட்டவரின் சாதியை சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதுகுறித்து மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், தகவ லறிந்த அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் க.சண்முகவள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கனகவேல் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சுந்தரேஸ்வரன் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சுந்தரேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுந்தரேஸ்வரனை போலீசார் கைது செய் தனர். மேலும், அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற 6 பேர் மீது வழக்கு
ஈரோடு, செப்.5- ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதே னும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்னி மலை, தாளவாடி,பவானி சாகர், கவுந்தப்பாடி ஆகிய பகுதி களில் மது விற்று கொண் டிருந்த 6 பேரை போலீசார் பிடித்தனர்.
சனாதனத்தை ஆதரிப்பது, தீண்டாமையை ஆதரிப்பதாகும்
கு.ராமகிருட்டிணன்
கோவை, செப்.5- சனாதனத்தை ஆதரிப்பது என்பது தீண்டா மையை ஆதரிப்பதாகும் என தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித் துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமுஎகச சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார். இதனிடையே அயோத் தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு, உதய நிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர் களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது. இந்நிலையில், அந்த சாமியார் மீது சட்டரீதியான வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தபெதிக நிர்வாகிகள் புகார ளித்தனர். இதன்பின் தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், சனாதனம் என்பது மூடநம்பிக்கையை பரப்பு கிறது. பெண்களின் உரிமையை பறிக்கிறது. பெண் களை அடிமைப்படுத்துகிறது. சாதி வேறுபாடு, வர்ணங்களை கற்பிக்கிறது. அப்படிப்பட்ட சனாதன வேண்டாம் என்ற கருத்தை தான் தெளி வாக உதயநிதி பதிவு செய்துள்ளார். வடஇந்தியா வில் இதுபோன்ற அநாகரீகமான செயல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்பு நடைபெற்றது. அப் போது, கலைஞர் கருணாநிதி கருத்து தெரிவித் தார். கலைஞரின் தலைக்கு ஒரு கோடி ரூபாயை அப்போது ஒரு சாமியார் அறிவித்தார். சனாதனத்தை ஆதரிப்போம் என்று சொன்னாலே, தீண்டாமையை ஆதரிக்கின்றோம் என்று அர்த்தம். பெண்களை அடிமைப்படுத்துவோம் என்று அர்த்தம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை தர வேண்டாம் என்று சொல்லுவது சனாதனமாகும். இதனை ஒழிக்க வேண்டும் என் கிற குரல் வலுவாக எழுப்ப வேண்டிய நேரமிது என்றார்.
ராமக்காள் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
தருமபுரி, செப்.5- தருமபுரி ராமக்காள் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி நகர எல்லையான கிருஷ்ணகிரி சாலையில், ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண் ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீர், சனத்குமார் நதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென் பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல்போல் காட்சியளிக்கும். சில ஆண்டுக ளுக்கு பிறகு, கடந்தாண்டு தான் சின்னாற்றின் உபரிநீர் ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வந்து, ஏரி முழுமையாக நிரம்பி யது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, அறுவடையும் செய்து விட்டனர். தற்போது, மீண்டும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒருமாதமாக வாட்டி வதைத்த கடும் வெயிலால், ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அச்சத்தில் இருந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவ லாக மழை பெய்து வருகிறது. இதனால் ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரி யின் தண்ணீரை நம்பி நெல் சாகுபடி செய்து விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை 10 இடங்களில் மறியல்
திருப்பூர், செப். 5 - ஒன்றிய மோடி அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவில் நடத் தும் மறியல் இயக்கத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத் தில் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை 10 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய பேருந்து நிலையம் எதி ரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பாக கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையிலும், திருப்பூர் தெற்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் என்.பாண்டி தலைமையில் கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பல் லடம் ரோடு காட்டன் மார்க்கெட் அருகே உள்ள தபால் நிலை யம் முன்பாக சாலை மறியல் நடத்தப்படுகிறது. உடுமலைபேட்டையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோபால் தலைமையிலும், உடுமலை ஒன்றியம் பள் ளபாளையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணி கண்டன் தலைமையிலும், அவிநாசியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் தலைமையிலும், ஊத்துக்குளியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், காங்கேயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.குமார், மடத்துக்குளத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், தாரா புரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், பல்லடத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையிலும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
மருத்துவத் தொகை தராமல் காலதாமதம்: ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
உடுமலை, செப்.5- ஓய்வூதியர்களுக்கு தர வேண்டிய மருத்துவ செலவுத் தொகையைத் தராமல் காலதாமதம் செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்து ஓய்வூதியர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவ லகத்திற்கு முன்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டத்தலை வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தல், மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு யூனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவ னம் ஓய்வூதியர்களுக்கு தர வேண்டிய மருத்துவ செலவுத் தொகையைத் தருவதில் மெத்தனப்போக்கை கடைப்பிடிப் பதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டது. இதில் கிளைச் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட திராளனோர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது
தாராபுரம், செப்.5- தாராபுரம் அருகே மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். தாராபுரம் அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டியில் 50 வயது பெண் ஒருவர் அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து டாக்டர் எனக்கூறி கடந்த 6 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த சிலர் அந்த பெண் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குர் கனகராணி தலைமையில் மருத்துவர் அருண் பாபு, கண்காணிப்பாளர் ஹரிகோபால கிருஷ்ணன் மற்றும் சுகாதார துறையினர் தாசநாயக்கன்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரியவந் தது. மேலும் அவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவம் பார்த்த அறையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சிய ருக்கு சமர்பித்த நிலையில் ஆட்சியர் உத்தரவின் பேரில் தன லட்சுமி மீது அலங்கியம் காவல்நிலையத்தில் மருத்துவ இணை இயக்குநர் கனகராணி புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குபதிவு செய்து தன லட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தார்.
முகமூடி கொள்ளையர்களின் தலைவன் கைது
தாராபுரம், செப்.5- தாராபுரம் வட்டார பகுதியில் கொள்ளை சம்பத்தில் ஈடு பட்ட முகமூடி கொள்ளையர்களின் தலைவன் மாணிக்கத்தை தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறி யிருப்பதாவது, தாராபுரம் வட்டார பகுதியான குளத்துப் பாளையம், ராம் நகர், அருள் ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிக ளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து பல் வேறு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து பீரோவை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தாராபுரம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. முகமூடி கொள்ளையர்களை பிடிக்க குற்றப்பிரிவு போலீசாரால் தனிப்படை அமைக்கப் பட்டு சி.சி.டிவி. கேமராவின் பதிவுகள் அடிப்படையில் குற்ற வாளிகளின் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி வந்த னர். இந்நிலையில் தாராபுரம் குற்றப்பிரிவு தனிப்படை போலீ சார் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அம்பேத்கார் நகர் காமாட்சிபுரம் மாணிக்கம் (29) என்பவரை கைது செய்தனர். மாணிக்கத்திடம் நடத்திய விசாரணையில் முகமூடி கும்பலின் தலைவனாக செயல்பட்டது மாணிக்கம் தான் என்பதும், மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு தலைநகரங்க ளில் 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குற்றவாளி மாணிக்கத்தை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்ததாக தெரிவித்தனர். ஏற்கனவே மாணிக்கத்தின் கூட்டாளிகள் மூன்று பேர்க ளான தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுன் (30), தேனி மாவட்டம், குப்பியநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ்(45). தேனி மாவட்டம், ஜங்கிள் பெட்டியைச் சேர்ந்த முருகேசன் (52) ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் தோட்டக்கலை இயக்குநர் தகவல்
தாராபுரம், செப்.5- மூலனூர் வட்டார பகுதியில் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளதாக தாராபுரம் வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். தாராபுரம் அடுத்து உள்ள மூலனூர் வட்டாரத்தில் 2023 - 24 ஆம் நிதி ஆண்டிற்கு 225 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்க ளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதற்காக அரசு ரூ.54 லட்சம் மானியமாக ஒதுக்கியுள் ளதாக தாராபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக் குநர் ச.திவ்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் சொட்டுநீர் பாசனம் அல்லது நுண் ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய் கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயி லாக பயிர்களுக்கு தேவையான நீரை துளித்துளியாக மண் ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். நீராதாரம் குறைந்து வருவதாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருவதாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க உற்பத்தி திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. எனவே கிடைக்கும் நீரைக்கொண்டு வேளாண்மை யில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசிய மான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காமல் உணவு உற்பத்திக்கு பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர் பாசனம் என்னும் சொட்டுநீர் பாசன திட்டமாகும். சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகி றது. ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால் உபகரணங்கள் மாற்றிக்கொள்ள மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் நகல், வங்கி பாஸ்புக் புத்தக நகல் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை கீழ்காணும் எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். மூலனூர் வட்டாரம் - 8838508679, கன்னிவாடி வட்டாரம் - 9677776214, தோட்டக்கலை அலுவலர் - 9385794707 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தை குறைக்க கோரி நாளை உண்ணாவிரதம்
திருப்பூர், செப். 5 - சிறு, குறு, நடுத்தரத் தொழில்க ளுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி, தமிழக அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்ட மைப்பினர் செப்டம்பர் 7ஆம் தேதி பல்லடம் அருகே காரணம்பேட்டை யில் உண்ணாவிரதம் மேற்கொள் கின்றனர். திருப்பூரில் செவ்வாயன்று திருப் பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற மின் நுகர் வோர் கூட்டமைப்புக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி உண்ணாவிரதப் போராட் டத்தில் தொழில் அமைப்பைச் சேர்ந் தோர் பெருந்திரளாகப் பங்கேற் பதென முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகி றது. திருப்பூர், கோவை, ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக் கான சிறு, குறு நிறுவனங்கள் செயல் பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக மின்துறை சார்பில் அமல்படுத்தப் பட்ட பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட் டணம் தொழில்துறையினரை மிகப் பெரும் அளவில் பாதிப்படைய செய் திருக்கிறது. அதனை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்பது மாத காலமாக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட அரசின் கவனத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட் டன. எனினும் இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொழில்துறையை பாதுகாக் கக்கூடிய வகையில் பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் ஆகிய வற்றை திரும்ப பெற வேண்டும் என மின்வாரியம் மற்றும் அரசின் கவ னத்தை ஈர்க்கக்கூடிய வகையில் கார ணம்பேட்டை நால்ரோடு பகுதியில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த உண்ணாவிரதம் ஒரு தொடக்கம் தான். அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தப் படும் என்றும் தொழில் துறையினர் தெரிவித்தனர்.
10 கோடி அறிவித்த சாமியார் உருவப்படம் திருப்பூரில் எரிப்பு
திருப்பூர், செப்.5- சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தலைக்கு பத்து கோடி ரூபாய் அறிவிப்பு வெளி யிட்ட அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியாரின் உருவப்ப டத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக தமிழ் புலிகள் கட்சியி னர் தீயிட்டு எரித்தும் , செருப் பால் அடித்தும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
நூல் விலையை நிர்ணயிக்க முத்தரப்புக்குழு: சைமா கோரிக்கை
திருப்பூர், செப். 5 – பின்னலாடை நூல் விலையை நிர்ண யிக்க பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், நூற்பாலை உரிமையாளர் சங்கம் மற்றும் பஞ்சு விற்பனையாளர்கள் கொண்ட முத்த ரப்புக் குழுவை அமைத்து மூன்று மாதங்க ளுக்கு ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பின்ன லாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) வலி யுறுத்தி உள்ளது. சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் செவ்வா யன்று விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: பின்னலாடைத் தொழிலை மீட்டெடுக்க வேண்டிய அவசி யமான தருணமாக இது உள்ளது. திருப்பூரின் பாரம்பரியம் மிக்க பின்னலாடைத் தொழில் தற்பொழுது பெரும் பின்னடைவை சந்தித்து கேள்விக்குறியாகி நிற்கிறது. நூற்பாலை உரிமையாளர்கள் மாதம் ஒரு முறை நூல் விலை நிர்ணயம் என்பதை தற் போது 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்கின்றனர். சில நூற்பாலைகள் வாரம் ஒரு முறை நூல் விலையை நிர்ணம் செய்வ தாக குறிப்பிடுகின்றனர். பின்னலாடை உற்பத்தியைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் இரண்டு மாதம் மற்றும் சரக்கு இருப்புக்காக ஒரு மாதம் என மூன்று மாதம் கழித்துத்தான் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியும். மூன்று மாதங்களில் பல முறை நூல் விலை மாற்றத்திற்கு உள்ளா னால் தொழில் பெரும் சிரமத்தைச் சந்திக் கும். எனவே குறைந்தபட்சம் மூன்று மாதங் களுக்கு ஒரு முறை நூல் விலை நிர்ணயம் செய்வது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். இதற்காக முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என்று ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி அம்பேத்கர் சிலையை அகற்ற முயற்சி
திருப்பூர், செப். 5 – திருப்பூர் மாநகரில் அம்பேத்கார் சிலை அமைந்துள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என கூறி மாநகராட்சி நிர்வாகம் அதை அகற்றுவதற்கு கடிதம் கொடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரைச் சந் தித்துள்ளனர். திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் அம்பேத்கார் அறிவாலயம் அறக்கட்டளை என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு அம்பேத்கர் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது ஒருங்கிணைந்த கோவை மாவட்டத் தில் முதல் அம்பேத்கார் சிலையாகும். அம் பேத்காரின் பிறந்தநாள், நினைவு நாள் அன்று அனைத்து முற்போக்கு இயக்கங்கள், அர சியல் கட்சியினர் இங்கு வந்து மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வரு கின்றன. தற்போது சிலை அமைந்துள்ள இடம் ஆக் கிரமிப்பில் உள்ளதாகவும், இந்த ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மாநகராட்சி மூன்றா வது மண்டலத்தில் இருந்து கடிதம் அனுப் பியுள்ளனர். 30 ஆண்டு காலமாக பயன்பாட் டில் உள்ள அம்பேத்கார் சிலையை அகற்றுவ தற்கு திருப்பூர் மாநகராட்சி கடிதம் அனுப்பி யுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று அம்பேத்கார் சிலை அமைப்புக்குழு சார்பில் அர.விடுதலைச்செல்வன் கோரியுள்ளார். அத்துடன் அம்பேத்காருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என் றும் வலியுறுத்தி உள்ளார். திங்களன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் இது குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று திருப் பூர் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் த.பெ.தி.க. ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை உள் ளிட்ட அமைப்பினர் பங்கேற்றனர்.