districts

வெளிநாட்டவர் வருகை குறித்து தெரிவிக்காத தனியார் விடுதி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

உதகை, டிச.18- விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற் றுலாப் பயணிகள் குறித்து காவல் நிலையத் திற்கு தகவல் தெரிவிக்காத, உதகையைச் சேர்ந்த தனியார் விடுதி உரிமையாளர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்கள் மனதில் உடனடியாக உதகை வருகிறது. அதேபோல் ஐரோப்பிய நாட்டின் கால சூழ்நிலை நிலவுவதாலும், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ரயில் இயங்குவதாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இதன்படி, ஆண்டிற்கு சரா சரியாக 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசனில்  மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீல கிரிக்கு வந்தால், குறைந்தது 3 நாட்கள் முதல்  ஒரு வாரம் வரை தங்கியிருந்து பல்வேறு  இடங்களையும் பார்த்து ரசித்து செல் கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கினால் அதுகு றித்து தனியாக பதிவேடுகள் பராமரித்து  24 மணி நேரத்திற்குள் காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதனி டையே, கடந்த வாரம் ஈரான் நாட்டைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த னர். 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங் களை சுற்றி பார்த்த அவர்கள், உதகை -  குன்னூர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி னர். ஆனால், இதுகுறித்து தங்கும் விடுதி  நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அப்பக தியில் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், வெளிநாட்டைச் சேர்ந்த வர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து தனியார் விடுதி உரிமையாளர் ரஷீத் மீது காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறித்து  தகவல் தெரிவிக்கவிட்டால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.