districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரிசி கடையில் நூதன முறையில் திருட்டு'

அரிசி கடையில் நூதன முறையில் திருட்டு நாமக்கல், மார்ச் 29- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை யில் முனியப்பன் என்பவர் அரிசி, சமையல் எண்ணெய் விற் பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இக்கடைக்கு வெள்ளியன்று வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கடை யின் உரிமையாளரை திசை திருப்பி உள்ளே அழைத்துச் செல்ல முயன்றார். அவர், “கடையின் உள்ளே ஊழியர் இருக் கிறார். அவர் அரிசியை காட்டுவார்” என கூறிவிட்டு கல்லாவின்  அருகிலே அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக்கொண் டிருந்தார். அப்பொழுது சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பிறகு  வருவதாக கூறி வெளியே சென்றவர் மீண்டும் கடையின் கல்லா அருகே வந்து, நகைச்சுவை நடிகர் வடிவேலு பட பாணி யில் சேம்பிள் அரிசி கொடுக்குமாறு கடை ஊழியரிடம் கேட் டுள்ளார். அவர் உள்ளே சென்ற நேரத்தில் இதனை சாதகமாக  பயன்படுத்தி கடை மேஜை மீது இருந்த சுமார் 15 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள செல்போனை அந்த நபர் திருடிச்சென் றுள்ளார். இந்நிலையில், கடையின் உரிமையாளர் முனி யப்பன் தனது செல்போன் காணாமல் போனது கண்டு பல  இடங்களில் தேடியும் கிடைக்காததால், கண்காணிப்பு கேமரா  காட்சிகளை பார்த்த பொழுது, செல்போன் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலை யத்தில் முனியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் செல்போனை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்ற னர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ஆம் தேதி துவக்கம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1 ஆம் தேதி துவக்கம் நாமக்கல், மார்ச் 29- தமிழ்நாடு முழுவதும் மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி 22 ஆம்  தேதி வரை நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 10  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். நாமக்கல் மாவட்டத்தில் 197 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 8,479 மாணவர்கள், 8,932 மாணவிகள் என மொத்தம்  17,411 பேர் எழுதினர். தனித்தேர்தவர்கள் 286 பேர் பங் கேற்றனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவதற்காக, நாமக்கல் ஜெய்விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச் செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம்  வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மையங்களில் ஏப்.1  ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விடைத்தாள்கள் திருத்தும்  பணி தொடங்குகிறது. இப்பணியில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். மூன்று மையங்களிலும் தினமும் ஒவ்வொரு பாடத்திலும் சுமார் 10 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தி மதிப்பீடு செய்யப் படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு போக்சோ வழக்கு பதிவு

சேலம், மார்ச். 29- சேலம் முன்னாள் கல்லூரி முதல்வர் மீது  பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு  செய்து தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.  சேலம் கொண்டலாம்பட்டியில் அரசு  உதவி பெறும்சௌடேஸ்வரி கலை அறிவி யல்  கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூ ரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரி யர்களிடம் அக்கல்லூரியின் முன்னாள் முதல் வர் பாலாஜி என்பவர் தவறாக நடந்து வருவ தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன் கல்லூரியில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகம், முதல் வர் பாலாஜி மீது துறை ரீதியான விசார ணையை நடத்தினர்.இதனிடையே அக்கல் லூரியில் பயிலும் மாணவி ஒருவர், சேலம்  மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி யிடம் புகார் அளித்தார்.  இதுபற்றி விசாரிக்க  அன்னதானப்பட்டி உதவி ஆணையாளர் ராம மூர்த்திக்கு காவல் ஆணையாளர் உத்தர விட்டார். இதன்பேரில் விசாரணை நடை பெற்று வந்தது. அந்த விசாரணையின் படி சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் 17 வயது மாணவியிடம் சில்மிஷத் தில் ஈடுபட்ட முன்னாள் கல்லூரி முதல்வர்  பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ்  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கல்லூரி முன்னாள் முதல்வர் பாலாஜியை  கைது செய்ய போலீசார் தேடி  வருகின்றனர்.

வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை

“ஏரியை பாதுகாத்துக் கொடுங்கள்”

சேலம், மார்ச் 29- கொட்டணத்தாள் ஏரியை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் வேட்பா ளர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழகத்தில் ஏப்.19 ஆம் தேதி மக்க ளவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர மாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில் சேலம் மக்களவை தொகு திக்குட்பட்ட நெய்க்காரப்பட்டி கிராம மக்கள்  கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி, கிராமத்தின்  நுழைவாயில் பகுதி துவங்கி, அனைத்து பகு திகளிலும் பேனர்கள் வைத்துள்ளனர். அதில்  கொட்டணத்தான் ஏரியை மீட்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்கள், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை சுத்தம் செய்து கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் உரைக்க வேண்டும். இறுதியாக, ஒன்று பட்டால் உண்டு  வாழ்வு என்ற வாசகத்துடன் மக்கள் பேனர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிக்கு சிறை

சேலம், மார்ச் 29- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஓய்வுபெற்ற சேலம் மண் டல நகராட்சிகளின் இயக்குநர் மற்றும் அவ ரது மனைவிக்கு தலா ஓராண்டு சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்கு நராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஏ.கணே சன் (78). இவரது மனைவி கனிமொழி (77).  கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம்  ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமா னத்திற்கு அதிகமாக ரூ.53.06 லட்சம் (125 சத விகிதம்) சொத்து சேர்த்ததாக கணேசன் மீது  புகார் எழுந்தது. இதையடுத்து கணேசன், அவரது மனைவி கனிமொழி ஆகியோர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2003  ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை  முடிவடைந்த நிலையில் வியாழனன்று தீர்ப்ப ளிக்கப்பட்டது. அதில், வருமானத்திற்கு அதி கமாக சொத்து சேர்த்ததாக கணேசன், அவ ரது மனைவி கனிமொழி ஆகியோருக்கு தலா  ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5  ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன  ரம்யா தீா்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்த ரப்பில் சிறப்பு வழக்குரைஞர் சிவகுமார் ஆஜ ரானார்.

மரத்திலேயே கருகும் பப்பாளி பழங்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தருமபுரி, மார்ச் 29- தருமபுரி மாவட்டத்தில் தண்ணீரின்றி பப் பாளி பழங்கள், மரத்திலேயே கருகி வருவ தால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு பரு வமழை முற்றிலும் பொய்த்துவிட்டது. இத னால் மொரப்பூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, கிணறுகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளதால், விவசா யத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளது. தண்ணீர் பற்றாக்குறையால் செடிகளி லேயே தக்காளி, பப்பாளி ஆகியவை கருகி  காணப்படுகிறது. இருக்கும் தண்ணீர் கால் நடைகளுக்கும், இதர அத்தியாவசிய தேவை களுக்கு போதுமானதாக உள்ளதால் விவசா யம் செய்ய தண்ணீர் இல்லை. தண்ணீர் இல் லாமல் பப்பாளி மரங்கள் காயந்து காணப்ப டுகிறது. இதில் காய்த்திருக்கும் காய்களும்  கருக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்து விட்டதால், விவ சாயிகள் அனைத்து வகையான பயிர்களி லும் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். எனவே, வேளாண் அதிகாரிகள் வறட்சியை கணக்கிட்டு, அரசின் உரிய நிவாரணம் பெற் றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டு வர அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

சேலம், மார்ச் 29- பிலிப்பைன்ஸ் நாட்டில் உடல்நலக்குறை வால் உயிரிழந்த வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவரின் உடலை, அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர ஒன் றிய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று  மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள் ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சேசன்சாவடி கிராமத்தைச் சோ்ந்த வர் விவசாயி பாலமுருகன் (54). இவரது  மூத்த மகன் அஜித்குமார் (25), பிலிப்பைன்ஸ்  நாட்டில் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயின்று முடித்துள்ளார். ஆனால்,  இவரது சான்றிதழைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சான்றிதழைப் பெறு வதற்காக, கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு  மருத்துவச்சான்றிதழைப் பெற்ற இவருக்கு,  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள் ளது. அதைத்தொடர்ந்து ஒரு மாதமாக அங் குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார், சிகிச்சை  பலனின்றி புதனன்று உயிரிழந்தார். இவரது  உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர  போதிய வழிமுறைகள் தெரியாத நிலை யில், பொருளாதார வசதியும் இல்லாததால் செய்வதறியாமல் அவரது பெற்றோர் தவித்து வருகின்றனர். எனவே, தனது மக னின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர இந்திய தூதரகம் மூலம் பிலிப்பைன்ஸ் அரசுடன் பேசி ஒன்றிய, மாநில அரசுகள் உதவ  வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோ ருக்கு அவரது பெற்றோர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

சிறையில் கைதி உயிரிழப்பு

சிறையில் கைதி உயிரிழப்பு சேலம், மார்ச் 29- தேனி மாவட்டம், ரயில்வே கேட் கருமாரியம்மன் கோவில்  தெருவைச் சோ்ந்தவர் ராஜா (52). கஞ்சா கடத்தல் வழக்கில்  காட்பாடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்து  சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் சிறை யில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து, கடந்த பிப்.19 ஆம் தேதி சேலம் அரசு மருத்து வமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீ ரலில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலை யில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு மாற்றப் பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த ராஜாவுக்கு திடீர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதை யடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகு றித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானி சாகர் தொகுதி ஆலோசனை கூட்டம்

ஈரோடு, மார்ச் 29- பவானி சாகர் சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானி சாகர்  சட்டமன்ற தொகுதியின் ஆலோசனை கூட்டம் சத்திய மங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திறக்கு திமுக வடக்கு  மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சர வணன், சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திமுக எல்.பி.தர்மலிங்கம். கொமதேக முத்துசாமி, திக சிவலிங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திராவிட லிங்கம்,  விடு தலை சிறுத்தைகள் கட்சி தங்கவேல், புரட்சிகர இளை ஞர் முன்னணி சக்திவேல், மனித நேய மக்கள் கட்சி சலீம்,  மக்கள் நீதி மையம் பழனிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராணுவ வீரர்களின் குதிரை சாகசம்

உதகை,மார்ச் 29- குன்னூரில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீராங்க னைகள் அசத்திய குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் ராணுவ மைய பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரி களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்க ளுக்கு சிறப்பு பயிற்சியாக குதிரை சவாரி ஜிம்கானாவில் நடத்தப்பட்டு வருகிறது. குன்னூரில் மவுன்டன் ஜிம்கானாவில்  50க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரைகளுக்கான ஓட்டப்பந்தயம், ஆசர்லே, 4  ஜம்பிங், பால் அண்ட் பக்கெட் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு  போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் வீரர், வீராங்கனை கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் துள்ளி சீறி பாய்ந்து போட்டி போட்டுக்கொண்டு முந்தி  சென்ற குதிரைகள் பார்வையாளர்களை கவர்ந்தது. பின்பு நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளை யம் மற்றும் நிறுத்தி வைக்கபட்ட வாகனங்களான ஜீப் மற்றும்  மோட்டர் சைக்கள் மீது பாய்ந்து குதிரைகள் அசத்தியது. குதிரையில் இருந்தே ஈட்டி எறியும் போட்டிகளும் நடத் தப்பட்டது. வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீரங்கனைகளுக்கு ராணுவ  பயிற்சி கமாண்டன் லெப்டன் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கேட யம் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

தெரு விளக்கு கோரிக்கை

உதகை,மார்ச் 29- பந்தலூர், உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பகுதிகளில் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் செயல்பட்டு வருகிறது. இதில் உப்பட்டி, பொன்னானி, நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதி, ஏலமன்னா,  புஞ்சவயல், பெருங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்  சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற னர். இங்கு சாதாரண நோய்களுக்கு சிகிச்சை பெறுவது  விபத்து மற்றும் இதர அவசர சிகிச்சைகள் பெறுவதற்கா கவும், பிரசவம் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் இந்த மருத்துவமனைக்கு இரவு நேரங்களிலும் வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது வனப்பகுதி யையொட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் இரவு நேரங் களில் வனவிலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் எதுவும் இல்லாததால் இரவு நேரங்களில் சிகிச் சைக்கு வருவோர் மிகவும் அச்சத்துடன் செல்லும் நிலை  உள்ளது. எனவே, இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  மற்றும் தொழிற்பயிற்சி மையம் செல்லும் பகுதிகளில்  நகராட்சி சார்பில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்


மது பாட்டில்கள் பறிமுதல் ஈரோடு, மார்ச் 29- சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட் டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து பதுக்கி  வைத்திருந்தவரை போலீசார் கைது கெய்தனர். பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் சினிமா கோட்டை வீதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை  செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் 100-க்கும்  மேற்பட்ட அரசு மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வீட்டில் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது அவர் அதே பகுதியை சேர்ந்த சந்தா னம்(48) என தெரிய வந்தது. சந்தானம் பவானி, சித்தோடு,  அம்மாபேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி அதை வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை  செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு போலீசார் சந்தானத்தின் மீது வழக்கு  பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மது பாட்டில்களை யும் பறிமுதல் செய்தனர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராட்டம்

திருப்பூர், மார்ச் 29- உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி தாராபுரத்தில் வீடுகளில் கருப்பு கொடி  ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ளது உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரை சேமிக்கும் வகை யில், இந்த அணை கட்டப்பட்டது. பல ஆண்டு களுக்கு முன்னர் உபரி நீரால் பயன்பெற்று வந்த உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி திட்ட பாசன விரிவாக்கம் நடந்த பிறகு, உபரி நீரின் அளவு குறைந்தது. அதோடு, அணைக்கு மழைநீர் வரும் ஓடையில் பல இடங்களில் ஊராட்சி நிர்வாகங் களால் தடுப்பணைகள் கட்டப்பட்டதால், அணைக்கு வரக்கூடிய மழைநீரும் வராமல்  போய்விட்டது. அணையின் நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால், உப்பாறு அணையால் பயனடைந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின் றன. இந்நிலையில், உப்பாறு அணையை நம்பியுள்ள விவசாயிகள், திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசன திட் டத்தில் உபரி நீரை திறந்துவிடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்ற னர். விவசாயிகளின் போராட்டத்தால் உப் பாறு அணைக்கு தண்ணீர் தருவதாக நீர்வ ளத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உறுதி அளித்தனர். ஆனால் கூறியவாறு தண் ணீர் திறக்கப்படவில்லை. இதனால் உப் பாறு பாசன விவசாயிகள் மற்றும் நடுமரத்துப் பாளையம் பகுதி பொதுமக்கள் வெள்ளி யன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள் தகுதி நீக்கம் தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை

உதகை,மார்ச் 29- தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேல் அதிகமாக செலவு செய்யும் வேட்பா ளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அதிகா ரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர் பாகவும், தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி  பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சி யருமான மு.அருணா  முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு தேர்தல் பொதுப் பார்வையாளர் மஞ்சித் சிங் தலைமை வகித்து பேசியதாவது, இந்திய தேர்தல்  ஆணையம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர் தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திட பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இனிவருங்காலங்களில் சிவிஜில் செயலி மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அதிகளவில் புகார்கள் வர  வாய்ப்புள்ளதால், சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர் கள் விழிப்புடன் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிவிஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களை சம்மந்தப்பட்ட பறக்கும் படை குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரமுகர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவ லர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.  இதனைத்தொடர்ந்து, தேர்தல் செலவினப் பார்வையாளர் கிரண் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும் கட்டாயமாக பின்பற்ற  வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகு திகளில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவ ரப்பட்ட பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  மேலும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியி டவுள்ள வேட்பாளர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணை யம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ரூ.95 லட்சத்திற் குள் தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு மேல் அதிகமாக செலவு செய்யும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்ப டுவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.  இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப் பாளர் சுந்தரவடிவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

வணிகர்களின் பணம் பறிமுதல் செய்வதற்கு எதிராக கடையடைப்பு

வணிகர்களின் பணம் பறிமுதல் செய்வதற்கு எதிராக கடையடைப்பு திருப்பூர், மார்ச் 29– திருப்பூர் தனியார் விடுதியில், வெள்ளியன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிர மராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதா கக்கூறி, சாதாரண வணிகர்கள் வரவு செலவு செய்வதற் காக கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமானிய விவசாயிகள் ஆடு, மாடு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் பணம் பிடிக்கப்படுவதில்லை. குறிப்பாக வாக்குப்பதிவு நடக்கும் 19 ஆம் தேதிக்கு முன்பாக 17, 18 தேதிகளில் அரசியல் கட்சி யினர் பணத்தைப் பட்டுவாடா செய்வதை இந்த அதிகாரி கள் தடுப்பதில்லை. பிடிப்பதில்லை. அப்போது அதிகாரிகள் தொடர்பு கொண்டால் அவர்கள் தொடர்பு கிடைக்காது. சுற்றுலா செல்பவர்களை, பொதுமக்களை, வணிகர் களை, விவசாயிகளை ஏன் இப்படி சிரமப்படுத்துகிறார்கள். இதனால் சாமானியர்கள், வணிகர்கள் வியாபாரம் தொழில் செய்ய முடிவதில்லை. எனவே ஏப்ரல் 2ஆம் தேதி செவ்வா யன்று சென்னையில் தேர்தல் ஆணையத்திடம் இப்பிரச் சனை குறித்து மனு அளிக்க உள்ளோம். உரிய, நடவடிக்கை எடுக்காவிட்டால். ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தொடர் கடை அடைப்பு போராட்டம் மாநிலம் முழு வதும் நடத்தப்படும். ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு மேலும் வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு மே 5  ஆம் தேதி மதுரையில் நடக்கிறது. ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அரசுகள் செயல்படுகின் றன. இதனால் வணிகர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். முழுமையாக ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட்டுகளை அனுமதித்தால் நம் நாட்டில் வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கும். அதேபோல் ஜிஎஸ்டி வரி விதிப்பும் வணிகர்களுக்கு பாதகமாக உள்ளது. குப்பை வரி உள்பட பல வரிகள் விதிக்கப்படுகின்றன. எனவே ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களைக் காக்க தனி சட்டம் நிறை வேற்ற வேண்டும். வணிகர்களின் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி வணிகர்களின் விடுதலை முழக்க மாநாடாக மதுரை மாநாடு நடைபெறும். இதற்காக மாவட்டந்தோறும் வணிகர் சங்கங்களை சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

செலவின பார்வையாளர்களின் கைப்பேசி எண்கள்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை மக்களவை தொகு திக்குட்பட்ட பல்லடம், சூலூர், கவுண்டம் பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக வினோத் ஆர்.ராவ்  நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94896 –  87740 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு  புகார்கள் குறித்து தெரிவிக்கலாம். கோவை, நீலகிரி மக்களவை தொகுதி களுக்கு காவல் பார்வையாளராக மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94862 - 68740 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்லடம், சூலூர், சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிகளின் செலவினப் பார் வையாளராக கீது படோலியா நியமிக்கப் பட்டுள்ளார். அவரை 94896 - 81740 என்ற எண்ணிலும், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிகளின் செலவினப் பார்வையாளராக உம்மே ஃபர்டினா அடில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94897 - 16740 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். பொள்ளாச்சி மக்களவை தொகுதிக் குட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக் கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடு மலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுப் பார்வையாளராக அனுராக் சௌத்ரி நிய மிக்கப்பட்டுள்ளார். அவரை 94896 - 06740 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் களை தெரிவிக்கலாம். பொள்ளாச்சி, திண்டுக்கல் மக்களவை தொகுதிகளின் காவல் பார்வையாளராக பிரதாப் கோபேந் திரா யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94893 - 00740 என்ற எண்ணில் தொடர்பு  கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.  தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள் ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளில் செலவினப் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள ஆஷிஷ்குமாரை 94868 - 13740 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வால்பாறை, உடுமலைப்பேட்டை, மடத் துக்குளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சௌரப்குமார் ராய்-யை 94885 - 94740 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிகளை மீறிய எல்.முருகன் மீது வழக்கு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட் பாளராக ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார். இதையொட்டி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று எல்.முருகன் நீல கிரி வந்தார். இதைத்தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் மாலை 5 மணி அளவில் உதகை அடுத்த கடநாடு கிரியு டையார் கோவிலுக்கு எல்.முருகன் சென்று  சாமி தரிசனம் செய்தார். அப்போது கட நாடு சமுதாயக்கூடம் முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மீறாக 100க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நடத்து வதற்கு குறித்து எந்தவித அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எல்.முரு கன், அவருடன் இருந்த பாஜக மாவட்டத்  தலைவர் மோகன்ராஜ், மற்றும் நிர்வாகி கள் ஜெகதீஸ், ராஜேஷ், யுவராஜ் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் கூட்டம் நடத்துவதாக இருந்தால் தேர்தல் சமயத் தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரி டம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்காததால் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது, என்றனர்.