districts

img

கரியமில வாயு வெளியேற்றம்: ஆலோசனைக்கூட்டம்

உதகை, ஜூன் 8- உதகையில் கரியமில வாயு வெளியேற் றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற் றது. வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் மற் றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் கரிய மில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட் டம் தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத னன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமை வகித் தார்.  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இயக்குநர் தீபக் பில்ஜி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை செய லாளர் சுப்ரியா சாஹூ பேசுகையில், கரிய மில வாயு வெளியேற்றத்தை குறைக்க அரசு கொள்கை வகுத்து செயல்பட்டு வருகிறது.  இதனடிப்படையில் கடந்தாண்டு மாநிலத்தில்  3 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட் டன. இதில், 80 சதவிகித மரக்கன்றுகள் உயிர் பிழைத்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களில் மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந் தாண்டு 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனங் களில் பசுமை போர்வையை மீட்டெடுக்க மரக் கன்றுகள் நடவு பணி உதவும். சீரழிந்த வனங் களை மீட்டெடுத்தல் நடவடிக்கைக்காக நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் 5 ஆண்டு களுக்கு ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது.  

இந்தியாவில், தமிழ்நாட்டில் தான் சதுப்பு நிலங்களில் பொருளாதார மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுப்பு நிலத் தின் பொருளாதார மதிப்பு ரூ.54 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கரிய மில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காலநிலை மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசு  கொள்கை வகுத்துள்ளது.  நீலகிரி மாவட் டத்தில் முதல் காலநிலை மாற்றம் குழு,  மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக் கப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர் கால நிலை மாற்றம் அலுவலராக நியமிக்கப்பட் டுள்ளார். நீலகிரி மாவட்டத்தை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் முதல் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக நீல கிரி உருவாக வாய்ப்புள்ளது. இதற்காக இங்கு மின் வாகனங்கள் பயன்பாடு அதிக ரிக்க வேண்டும். நீலகிரியின் பசுமை போர்வை அதிகரிக்க வேண்டும் என கருத்துகள் தெரி விக்கப்பட்டன. கரியமில வாயு வெளியேற் றத்தை குறைக்க 3 மாதங்களில் ஒரு ஒருங்கி ணைந்த திட்டம் தயாரிக்கப்படும், என்றார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், தமிழ்நாடு ஆட்சிமன்ற குழு உறுப் பினர்கள், மான்டெக் சிங் ஆலுவாலியா, எரிக் சோல்ஹிம், பூவுலகின் நண்பர்கள் அமைப் பின் சுந்தர்ராஜன் மற்றும் ஏ.ராமசந்திரன், சவுமியா சுவாமிநாதன், நிர்மல்ராஜா, ரமேஷ் ராமசந்திரன், சுந்தரராஜன் கலந்து கொண்ட னர்.  முடிவில், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை இணை இயக்குநர் எல். சவுமியா நன்றி கூறினார்.