districts

img

கார் சிலிண்டர் வெடித்து விபத்து - உடல் கருகி ஒருவர் பலி

கோவை, அக். 23 -  கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர்  வெடித்ததில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். கோவில் அருகே இவ்விபத்து நடைபெற்றுள்ளதையடுத்து தமி ழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று  வெடித்து சிதறியுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் உடனடி யாக தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக் கும் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரி ழந்திருப்பது தெரிய வந்தது.  தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வந்து விசாரணை மேற்கொண்டார்.  முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரி குறித்தும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை யடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசா ரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஏடிஜிபி தாமரைக் கண்ணன் விபத்து நடந்த பகுதிக்கு வந்து  ஆய்வு மேற்கொண்டார். கோவில் அருகில் இந்த விபத்து நடந்து இருப்பதால் அனைத்து  கோணங்களிலும்  விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றார்.  முன்னதாக, தமிழக காவல்துறை தலை வர் சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற் கொண்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், கார் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் தலைமையில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையிலிருந்து தடயவி யல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் தட யங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கோவை  மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த  பாம்ப் ஸ்குவாட் குழுக்களும், மோப்ப நாய் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது. காரில் 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள் ளதாக தெரிவித்த அவர், அதில் ஒன்று வெடித்துள்ளது. எங்கிருந்து இவை வாங்கப்பட்டன என விசாரணை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான வாக னம் மாருதி கார் என தெரிய வந்துள்ளது. அதன் பழைய உரிமையாளர்கள் மற்றும் புதிய உரிமையாளர் குறித்து ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் அடையா ளங்களை சேகரித்து அவர் யார் என புலன்  விசாரணை செய்து வருவதாகவும், காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.  இந்நிலையில், சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் உக்கடம் கோட்டை புதூர்  பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பதும்  அவர் பழைய துணிக்கடையில் வேலை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந் துள்ளது.